Connect with us

கொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் ?

vijayabaskar

மருத்துவம்

கொள்முதல் ரத்து என விஜயபாஸ்கர் அறிவிப்பு.. தப்பித்தார் ?

விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏறத்தாழ ஒன்றரை கோடி  நட்டம் என்று எழுதியிருந்தோம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அளித்த தாக்கீதின் பேரில் விரைவு பரிசோதனை  கருவிகள் கொள்முதலை ரத்து செய்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித் திருக்கிறார்.

தமிழக அரசு தானாக ரத்து செய்யவில்லை. அந்தக் கருவி பயன் அற்றது என்றும் அதன் முடிவுகள் நோய் பற்று இருக்கிறதா என்பதை காட்டாது என்று தெரிய வந்தபின் யாரும் அதை பயன் படுத்த வேண்டாம் என்ற  முடிவை எடுத்து  ஐ சி எம் ஆர் அறிவித்தது.

இதே ஐ சி  எம் ஆர்  ஏன் கொள்முதல் ஆர்டர் கொடுத்தது?

நம்மை விட ஆந்த்ரா கேரளா அதிக விலை கொடுத்தார்கள் என்று சொல்லும் விஜயபாஸ்கர் பின் ஏன் ரூபாய் நானூறுக்கு மேல் வாங்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

எந்தப்  பயனும் அற்ற விரைவு பரிசோதனைக்  கருவிகளை உலக நாடுகள் பலவும் ஆர்டர் செய்திருக்கின்றன . அவைகள் என்ன முடிவை எடுக்கப் போகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

கொள்முதல் நடைமுறைக்கு வந்திருந்தால் விஜயபாஸ்கர் கூண்டில் நின்றிருப்பார். ரத்து செய்ததால் தப்பி விட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மருத்துவம்

To Top