Connect with us

டிரம்பின் மிரட்டலும் மோடியின் மனிதாபிமானமும் ?!

modi-trump

மருத்துவம்

டிரம்பின் மிரட்டலும் மோடியின் மனிதாபிமானமும் ?!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை அநாகரிகமானது.

ஹைட்ராக்ஸி குளோரோகுய்ன் மாத்திரைகள் இந்தியாவில்  மலேரியாவுக்கு பயன்படுத்தப் படும் மருந்து. இப்போது கொரானா வுக்கு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில் அந்த மாத்திரைகள் பயன் அளிக்கும் என்று அமெரிக்கவும் ஐரோப்பிய நாடுகளும் நம்புகின்றன.

இந்தியாவில் அதிக அளவின் தயாராகும் அந்த மருந்துக்கு உலக அளவில் பெருத்த தேவை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது அமெரிக்க அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்த  மருந்து  தேவைக்காக டிரம்ப் நேரடியாக மோடியிடம் பேசியிருக்கிறார்.

நேற்று பேசிய நிலையில் இன்று டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்தியா நாங்கள் கேட்டதை கொடுக்க வில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அதற்கு அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டி இருக்கிறார். இப்படி ஒரு அதிபர் வெளிப்படையாக மிரட்டி  பேசியது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

ஆனால்  இந்தியா  அதை பொருட் படுத்தாமல் மேற்படி மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப் பட்டிருந்த தடையை இன்று நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

இது  முழுதும் மனிதாபிமானம் . நேரம் வரும்போது இத்தகைய மிரட்டலுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று நம்புவோம்.

இத்தனைக்கும் அமெரிக்க அந்த மருந்தை 29 மில்லியன் அளவுக்கு ஸ்டாக் வைத் திருக்கிறது.

பார்ப்பதற்கு டிரம்பின்  மிரட்டலுக்கு மோடி பணிந்தது போன்ற தோற்றம் தெரிந்தாலும் உண்மையில் இது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கை என்பதை  உலகம் அறியும்.

ஏனெனில் தனக்கு தேவையான மருந்தை ஸ்டாக் வைத்துக் கொண்டுதான் இந்தியா தடையை  விலக்கி இருக்கிறது.

மோடியை மிரட்ட டிரம்ப்பால் முடியுமா ?

மோடிக்குப் பின்னால் 130  கோடி இந்தியர்கள்.

கொரானாவில் அரசியல் செய்யுமளவு மலிவானவரா மோடி ?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மருத்துவம்

To Top