Connect with us

பள்ளிக்கல்வித் துறையை இயக்குவது செங்கோட்டையனா? மோடியின் பிரதிநிதிகளா?

கல்வி

பள்ளிக்கல்வித் துறையை இயக்குவது செங்கோட்டையனா? மோடியின் பிரதிநிதிகளா?

மாட்டுப்பொங்கல் அன்று விடுமுறை நாள் என்றாலும் அன்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு உரையாற்றுகிறார் என்பதற்காக ஜனவரி 16ம் தேதி ஒன்பது முதல் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்புகிறார்.

அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மானவர்கள் விரும்பினால் வரலாம் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை என்கிறார். அதாவது முதல் அமைச்சருக்கு தெரிந்தது அமைச்சருக்கு தெரியவில்லை. டெல்லி நேரடியாக முதல் அமைச்சாருக்கு உத்தரவிட்டதா? துறை அமைச்சருக்கு மரியாதை அவ்வளவுதானா?

அடிமை சேவகம் செய்வதில் ஏன் இப்படி தள்ளாட்டம்.?

எதிர்ப்பு வலுத்ததும் இப்போது அன்று விடுமுறைதான் என்கிறார்கள். சுற்றறிக்கையில் விலாவாரியாக மின் தடை ஏற்படா வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் தாக்கீது கொடுத்தவர்கள் இப்போது பின் வாங்குகிறார்கள்.

வெளியே வந்திருப்பது செங்கோட்டையனுக்கும் முதல் அமைச்சருக்கும் இருக்கும் இடைவெளி. அது பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in கல்வி

To Top