மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? குஜராத் பள்ளியில் கேள்வி?!

மகாத்மா காந்தி எப்படி  தற்கொலை செய்து கொண்டார்? குஜராத் பள்ளியில் கேள்வி?!

அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது.

அதில் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன ஒரு தேர்வில் ‘மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கொலைகாரன் கோட்சேவால் தேசத்தந்தை கொலை செய்யப் பட்டதை மறைக்க இந்த கேள்வி கேட்கப்பட்டதா?

ஆட்சியாளர்கள் இதனால் மகிழ்வார்கள் என்று கருதி இப்படி ஒரு கேள்வியை புகுத்தினார்களா?

நிச்சயம் இந்த கேள்வியை தயாரித்தவர் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அறியாதவராக இருக்க முடியாது.

வேண்டுமென்றே இப்படி ஒரு கேள்வியை தயாரித்து ஏன்?

இதற்கு ஒரு விசாரணை நடத்தி வேண்டும் என்றே குற்றம் இழைத்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படித்தான் தங்கள் நிலைப்பாட்டை யார் மூலமாகவாவது தெளித்து விடுவது அவர்களுக்கு கை வந்த கலை.

அரசு இதில் சம்பந்தப் படவில்லை என்று கழன்று கொள்வார்கள். ஆனால் இதை அரசு அனுமதிக்குமா? நடவடிக்கை எடுக்குமா? பாஜக அரசில் எது வேண்டுமானாலும் நடக்கும்??!!