Connect with us

வேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு??!! தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்?!!

veshti

தமிழக அரசியல்

வேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு??!! தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்?!!

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் அரசு அலுவலர்களுக்கு ஆன ஆடை கட்டுப்பாடு இப்போது தேவைதானா?

அதன் நோக்கம் உண்மையில் என்ன?

தமிழ்க் கலாச்சாரத்தை முடக்குவதுதான் நோக்கமா?

தமிழர்களின் வேட்டி துண்டு கலாசாரம் சிலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதை ஒழிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். தேவையே இல்லை. தமிழக இளைஞர்கள் தாங்களாகவே வேட்டியை விட்டு விலகி எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். பாதி வயதை  தாண்டியவர்கள்தான் வேட்டியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்க திட்டமிட்டு விட்டார்கள்.

தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணி தனது செய்திக் குறிப்பில் நம் கவலையை பகிர்ந்து கொள்கிறார். முதலில் வந்த ஆணையில் வேட்டி இடம் பெற வில்லை என கவலைப்பட்டோம். திருத்தி அமைக்கப்பட்ட ஆணையில் வேட்டி அணியலாம் என்று தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறுகிறார்.

ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இந்த பிற்போக்குத் தனத்தை கண்டித்து உள்ளனர். இதுவரை அரசு அலுவலர்கள் முறையற்ற உடை அணிந்து வந்ததை போலவும் இவர்கள் வந்து அதை திருத்தம் செய்ய முற்படுவது போலவும் ஒரு கருத்து உருவாக்கம் செய்தது யார்?

முதலில் வந்த ஆணையில் வேட்டியை அணியக்கூடாது என்று திட்டமிட்டவர் யார்?    

அலுவலர்கள் மத்தியில் ஒரு ஒழுங்கை கொண்டுவருவதுதான் நோக்கம் என்றால் இதுவரை ஒழுங்கு குன்றி இருந்ததா?

அலுவலர்கள் அப்படி என்ன தகாத உடை அணிந்து வந்தார்கள்?

டி ஷர்ட் தான் அதிகபட்ச தகாத உடை என்றால் அதை மட்டும் தடை செய்து விட்டுப்போகட்டுமே? 

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் அணியலாமாம்.  ஆண்கள் பேன்ட், சட்டை அணியலாமாம். இது பற்றி சந்தேகம் கேட்டதற்கு வேட்டி பற்றி அறிவிப்பு ஏதும் இல்லை என்றார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ என்னவோ அணியலாம் பட்டியலில் வேட்டியை சேர்த்துவிட்டார்கள்.

தமிழர்கள் என்றால் வேட்டி சட்டை துண்டு தான் பாரம்பரிய உடை. பேண்டுதான் புதிது. ஆனால் இப்போது வேட்டி அரிதாகி விட்டது. இந்நிலையில் வேட்டியை பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் வெளியிடப் பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுவதில் தவறில்லை.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தானாக முன்வந்து இந்த கட்டுப்பாட்டை அமுல்படுத்தினாரா முதல் அமைச்சருடன் கலந்து அறிவித்தாரா என்பதும் தெரியவில்லை.

அமைச்சர்கள் எல்லாம் வேட்டி கட்டிகொண்டிருக்கும்போது அலுவலர்களுக்கு தடை விதிப்பது என்பது நடவாது.

என்றாலும் இன்று அதிமுக இருக்கும் நிலையில் யார் யாரெல்லாம் எப்படி எல்லாம் மிரட்டுவார்களோ என்று சந்தேகப்படுவது சரிதானே?

ஆனால் இந்திய பாரம்பரிய உடைகளையும் ( பைஜாமா, ஜிப்பா போன்றவை ) அணிய அனுமதிக்கப்படுகிறது என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அந்த விதியில் மேலும் ஒரு திருத்தம் செய்து உத்தரவை வெளியிட்டார். கூடவே ஆண் ஊழியர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்  வேட்டியை அணியலாம் என்று கூறுகிறார். அதாவது முதலில் வேட்டியை விட்டு விட்டு அதனால் பிரச்னை ஏற்படும் என்பதை உணர்ந்து அடுத்த உத்தரவில் வேட்டியை  சேர்த்து வெளியிடுகிறார் என்றால் இதெல்லாம் தமிழக அமைச்சர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா அல்லது ஆளுநர் மாளிகையில் இருந்து ஏதாவது உத்தரவுகள் வந்ததா என்பது தெரியவில்லை.

நல்லவேளை குர்தா பைஜாமா ஜிப்பாவை கட்டாயமாக்காமல் விட்டு விட்டார்கள்??!!

நன்றி !   நன்றி  !  நன்றி !

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top