Connect with us

கொரொனாவில் அரசியல் செய்வது பழனிசாமியா ஸ்டாலினா?

stalin-eps

தமிழக அரசியல்

கொரொனாவில் அரசியல் செய்வது பழனிசாமியா ஸ்டாலினா?

கொரொனாவில் கூட அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று  முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

நோயில் அரசியல் செய்வது ஒரு  நோய். அதை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் ஸ்டாலின் செய்வது அரசியலா அக்கறையா ?

ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வேலை என்ன? ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டலாம் . கண்டிக்கலாம். ஆலோசனைகள் கூறலாம். மக்கள் மன்றத்திடம் முறையிடலாம். அதைத்தானே ஸ்டாலின் செய்கிறார். அது எப்படி அரசியல்  ஆகும்?

அனைத்துக்கட்சி  கூட்டத்தை  கூட்டி  தீர்மானங்கள்  நிறைவேற்றி அனுப்பி இருக்கிறார்கள்.

அதில் எதை ஏற்றுக் கொள்கிறார் எதை ஏற்றுக் கொள்ள வில்லை அல்லது இயலவில்லை எனது குறித்து முதல்வர் என்ன கருத்துக் கூறுகிறார்.

கோரிக்கைகள் குறித்து எதுவுமே கூறாமல்  எதை சொன்னாலும் அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவது என்ன வகை அரசியல்.

ரேஷன் அட்டைதார்களுக்கு நிவாரணமாக ரூபா ஐந்தாயிரம்‌ தரவேண்டும், கொரொனாவில் இறந்த குடும்பதினருக்கு பரிவுத் துகையாக ஒரு கோடி தரவேண்டும். 35000 கோடி உடனடியாக ஒதுக்கி நிவாரணப் பணிகளை முடுக்கி விட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.  இவைகளில் எவற்றை ஏற்றுக் கொள்கிறது அரசு அல்லது நிராகரிக்கிறது என்பது பற்றி  கருத்தை சொன்னால் அது அர்த்தமுள்ளது.

இன்று ஸ்டாலின் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல  வேண்டிய அவசியம் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இதைவிட மக்களை அவமதிக்கும் செயல் உண்டா? 

மக்கள் தங்களை சமூக விலகலுக்கு உட்படுத்திக் கொண்டு கொரொனாவின் தாக்கத்தை குறைக்க உதவி இருக்கிறார்கள் .

இன்னும் ஆபத்து முழுமையாக நீங்கவில்லை .

இந்நிலையில்  பொறுப்பற்ற அறிக்கைகள் கொடுத்து ஏற்கெனெவே கேட்டு விட்ட தனது பெயரை  முதல்வர் மேலும் கெடுத்துக் கொள்ளவேண்டாம். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top