Connect with us

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80% வேலை கொடு !! ம.பி முதல்வரை பின்பற்று?

tamilnadu-education

தொழில்துறை

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80% வேலை கொடு !! ம.பி முதல்வரை பின்பற்று?

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 % வேலை கொடு

காங்கிரசின் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் நல்லதொரு காரியத்தை செய்திருக்கிறார்.

அங்கே அரசு உதவியுடன் ஊக்க சலுகைகளுடன் இயங்கும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இனி உள்ளூர் வாசிகளுக்கு 70% வேலை கொடுத்ததாக வேண்டும்.

காங்கிரஸ் முதல்வர் அறிவித்ததை பாஜக ஆட்சேபிக்க முடியாது. ஏனென்றால் அவர்களே குஜராத்தில் உள்ளூர் வாசிகளுக்கு 80% வேலை வாய்ப்பை உறுதி செய்வோம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இத்தனைக்கும் வெளி மாநில தொழிலாளிகள் மிக அதிக அளவில் குஜராத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதை பெருமுதலாளிகள் வரவேற்பார்களா என்பது சந்தேகமே. அவர்களுக்கு பிற மாநில தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கிடைப்பார்கள்.

தமிழ் நாட்டில் கட்டுமான தொழிலில் உணவு விடுதிகளில் சில்லறை கடைகளில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.

இங்கே தமிழ்நாட்டில் நெய்வேலியில் நிலம் எடுக்கும் போது உள்ளூர் கார்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம் என்ற உறுதிமொழி  காற்றில் பறக்க விடப் பட வில்லையா?

எல்லா மாநிலங்களிலும் இந்த முறை அமுல்படுத்தப்பட்டாலும் ஒன்றும் தவறில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 80% வேலை வாய்ப்பை அனைத்து துறைகளிலும் உறுதி செய்பவர்கள் தான் இனி ஆட்சிக்கு வர முடியும்  என்ற நிலையை உருவாக்குவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தொழில்துறை

To Top