Connect with us

24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்?!

chennai-24hours-shops

தொழில்துறை

24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்?!

24 மணி நேரமும் கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றதும் பொதுவாக வரவேற்கப்பட்டது.

ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் இது யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்றால் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே இது பயன் தரும். சிறு வணிகர்கள் பெருவாரியாக பாதிக்கப்படுவார்கள்.

முன்பே சில மருந்துக் கடைகள் பெட்ரோல் நிலையங்கள் போன்ற சில கடைகளுக்கு  எந்நேரமும் திறந்து வைக்க அனுமதி இருக்கிறது.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ல் கொண்டு வந்திருக்கிற திருத்தத்தின் பிரிவு 6ன் படி 10 பேருக்கு மேல் பணிபுரியும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு பொதுநலன் கருதி அனுமதி  வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி இரவிலும் நாள் முழுவதும் கடைகளை திறந்து வணிகம் செய்யலாம்.

பெண்களுக்கு பாதுகாப்பு, 8 மணி வேலை என்ற வரையறை, பெண்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது என்று எல்லாம் பல நிபந்தனைகளை விதிக்கிறது இந்த திருத்தம்.

இது பெட்டிக்கடைகள், சிறிய தேநீர்க் கடைகள் போன்ற பத்துக்கும் குறைவான ஊழியர்களை கொண்ட கடைகளுக்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றுதான் தெரிகிறது. 

பத்துக்கும் மேல் யார் ஊழியர்களை வைத்திருப்பார்கள்? பெரு நிறுவனங்கள் மட்டுமே. அவர்களுக்குத்தான் இது லாபம் தரும். இரவிலே இவைகள் வணிகம் செய்துவிட்டால் அதே பொருட்களை சிறு வணிகர்களிடம் வாங்க ஆள் இருக்காது.

இந்த திருத்தத்தை அமுல்படுத்தும் முன்பே பொதுமக்களிடம் கருத்து கேட்டார்களா?  தொழிற் சங்கங்களிடம் கருத்து கேட்டார்களா? அல்லது யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் மட்டும் கருத்து கேட்டார்களா?

வேலைவாய்ப்பு பெருகும். வணிகம் பெருகும். பொதுமக்களுக்கு சிரமம் குறையும்  என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். எந்த அளவு அது உண்மை என்று போக போகத்தான் தெரியும்.

குற்றங்கள் பெருகும் என்ற அச்சமும் கூடவே எழுகிறது.

காவல் துறைக்கு கூடுதல் சுமை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தொழில்துறை

To Top