Connect with us

நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!

neet

கல்வி

நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!

நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!

நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு தவறான தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

அதனால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மார்க் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் இப்போது அதை ரத்து செய்திருக்கிறது.

மூலக் கேள்வியான ஆங்கிலத்தில் கேள்வி சரியாக இருக்கும்போது அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆங்கில மொழியில் இருப்பதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி என்பதை சுட்டிக்  காட்டிய உச்ச நீதிமன்றம் அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றும் அதனால் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சொன்னதோடு  இந்த ‘அறிவை பயன்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப் பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தை குறை கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பில் முக்கியமாக சுட்டிக் காட்டப் படுகிறது. ” blind allocaion of 19 grace marks was ordered without application of mind’

ஒரு குறையை களைய வேண்டும் என்ற அக்கரையில் உயர் நீதிமன்றம் இன்னும் சற்று கவனமாக  இதை அணுகி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

இதனால் மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதான மரியாதை குறையத்தான் செய்யும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in கல்வி

To Top