Connect with us

சூர்யா சொல்வதில் என்ன தவறு? தரமான கல்வி ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாதா?

suriya-education

கல்வி

சூர்யா சொல்வதில் என்ன தவறு? தரமான கல்வி ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாதா?

நடிகர் சூர்யா ஒரு விழாவில் புதிய கல்வித் திட்டத்தை பற்றி பேசியது ஆதரவு அலைகளை உருவாக்கி விட்டது.

ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக் கூடாதா என்ற கேள்வி எல்லாராலும் எழுப்பப் படுகிறது.

இதுவரை பணக்காரார்களுக்கு மட்டுமே உயர்தர கல்வி கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

அரசின் கடமை எல்லாருக்கும் தரமான கல்வியும் தேவையான மருத்துவமும் கிடைக்கச் செய்வது.

இதை விட்டு விட்டு நாங்கள் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று மார் தட்டுவதில் பயனில்லை.

இலவசங்கள் பெரும்பாலானவை தேவை இல்லாதவைகள் ஆகிவிடும் இந்த இரண்டும் எல்லாருக்கும் கிடைத்து விட்டால்.

தனது அகரம் பௌண்டேஷனில் இதுவரை 54 மாணவர்கள் மருத்துவ கல்வியை பெற்றிருந்திருக்கிறார்கள் என்றும் அதாவது நீட் வருவதற்கு முன்பு, இப்போது நீட் வந்துவிட்ட பிறகு ஒரு கிராமப் புற மாணவர் கூட மருத்துவக் கல்வி பெறமுடியவில்லை என்றும் கூறுகிறார்.

புதிய கல்வத் திட்டத்தின் பல பகுதிகள் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்களை கல்வியில் இருந்து அப்புறப் படுத்தும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தனை நுழைவுத் தேர்வுகளை நடத்தினால் பள்ளியில் கல்லூரியில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கே படிப்பதெல்லாம் வேஸ்ட்  தகுதி தேர்வுக்கு தயார் செய்வத்துதான் படிப்பு என்றால் ஏன் பள்ளிகள் கல்லூரிகள்?

ஐயாயிரம் ஆண்டுகளாக பின்தங்கியோரை தாழ்த்தப்பட்டோரை கல்வியில் இருந்து ஒதுக்கி வந்தே அடக்கி ஆண்டவர்கள் இப்போதும் வேறு வகையில் எல்லாம் அதே நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்போம்.

பணக்காரர்கள் கையில் இருந்து கல்வி மையங்களை பறித்து அரசிடம் சேர்ப்போம்.  கல்வி ஒருபோதும் வணிக மயமாவதை அனுமதியோம்.

அனைவருக்கும் தரமான கல்வியை தருபவர்க்கே இனி ஆட்சி அதிகாரம் என்ற நிலை யை ஏற்படுத்துவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in கல்வி

To Top