தமிழக அரசியல்

ரஜினியின் தர்பார் கட்சியின் கொ ப செ ஆகிறாரா கராத்தே தியாகராஜன் ??!!

Share

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார் கராத்தே தியாகராஜன். அவர் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் கே சி வேணுகோபால். எனவே ராகுல் காந்திக்கு தெரியாமல் நடவடிக்கை எடுத்திருக்க முடியாது.

கொஞ்ச காலமாகவே அதிகமாக பேசி வருகிறார் கராத்தே. காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்கbவேண்டும் அதிக இடங்களை பெற வேண்டும் என்றெல்லாம் பேசி பதிலடியாக் கேஎன் நேரு இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரசை தூக்கி சுமப்பது என்று கேட்க வைத்தார்.

உண்ணா விரத போராட்டத்தில் திமுக தலைமை மேலிட பொறுப்பாளர்களை அனுப்பாமல் சட்ட துறை செயலாளரை அனுப்பியதை விமர்சித்து பேசி பிரச்னையை கிளப்பினார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினிகாந்த் போராட்டத்தை விமர்சித்து பேசியபோது அவருக்கு சப்போர்ட் செய்து பேசினார். அவரை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தினார்.

எனவே தொடர்ந்து பிரச்னை ஏற்படுத்தி வந்ததால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார். எடுத்த பிறகும் உள்கட்சி பிரச்னைகளை தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகிறார்.

எல்லாவற்றுக்கும் மேல் அவரது தலைவர் ஆன ப சிதம்பரத்தை சந்தித்து பேசிய பிறகும் உள்கட்சி பிரச்னைகளை பேசி வருகிறார்.

ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தான் தியாகராஜன் பேசியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் மாநில தலைவர் அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க அறிவுறித்தியதாகவும் சொல்லிய பிறகும் வருத்தம் தெரிவிக்காமல் பேட்டி கொடுக்கிறார்.

ரஜினிகாந்த் 200% கட்சி ஆரம்பிப்பது உறுதி எனவும் போட்டி ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான் இருக்கும் எனவும் சொல்லும் அளவு தியாகராஜன் சென்று விட்டார்.

                       எனவே ரஜினி தர்பார் படத்தை முடித்து விட்டு கட்சி ஆரம்பிக்கும்போது அதில் கொள்கை பரப்பு செயலாளர் ஆக தியாகராஜன் முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. 

அங்காவது உறுதியாக நிற்கட்டும். தியாகராஜன், மணியன், போன்றோர் ரஜினி எப்போது கட்சி  ஆரம்பிப்பார் என்று இலவு காத்த கிளியாக காத்து இருக்கின்றார்கள்.

பாஜக வலையில் விழுந்த ரஜினி தனியாக நிற்பது போல பாவனை செய்து கூட்டத்தை கூட்டி காவிக்கட்சி தீட்டும் திட்டத்திற்கு துணை போவார் என்பதும் அதற்கு இன்றைய ஆளும் அதிமுகவும் துணை போகும் என்பதும்தான் எல்லாராலும் எதிர்பார்க்கப்படும் எதிர்கால அரசியல்.

அதில் பங்கேற்க தன்னை தயார் செய்துகொள்ளும் தியாகராஜன் காங்கிரஸ் தலைவர் அழகிரியை குற்றம் சாட்டி அவரை ப சிதம்பரத்திற்கு எதிரானவர் போல சித்திரிக்க முயல்வது அவர் சமாதானமாக போவதற்கு அறிகுறியாக தெரியவில்லை. காரைக்குடி தொகுதிக்கு கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலாக நாசே ராமச்சந்திரனை அழகிரி  பரிந்துரை செய்தார் என்று அவரை சிதம்பரத்திற்கு எதிரானவர் ஆக சித்தரிக்கிறார்.

இன்றோ நாளையோ தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அழகிரியை  தியாகராஜன் சந்திக்காமல போனால் ரஜினியின் தர்பார் கட்சியில் தியாகராஜன் கொ ப செ தான் என்பது உறுதியாகி விடும்.

This website uses cookies.