தமிழக அரசியல்

மீண்டும் விஜயபாஸ்கர்.! முதல்வருடன் சமரசமா?

Share

கொரொனா பாதிப்பு பற்றி மக்களுக்கு அறிவிக்கும் வேலையை செய்து கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று காணாமல் போனார்.

அமைச்சருக்கும் முதல்வருக்கும் பிரச்னை என்றும் அதனால் அமைச்சர் ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறார் என்றும்  செய்திகள் வந்த நிலையில்  அமைச்சர் வேலையை துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் செய்து வந்தார்.

இன்று திடீர் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து கொரொனா பதிப்புகள் பற்றி அரை மணி நேரத்துக்கும் மேல் விவரமாக பேசினார்.

செய்திகளை அமைச்சர் சொல்கிறாரா துறை செயலாளர் சொல்கிறாரா என்பது பற்றி  மக்களுக்கு அக்கறை  இல்லை. சொல்லும் செய்திகள் நல்லவையாக இருக்க வேண்டும் உண்மையாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்னமும் இந்திய அளவில் நோய் பாதித்த  மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது என்பதை மாற்ற முடிந்தால் இவர்களை பாராட்டலாம்; பொறுத்திருந்து பார்ப்போம்.

This website uses cookies.