தமிழக அரசியல்

மத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை நீட்டித்த ஓடிஷா.. தமிழகத்தின் தடுமாற்றம்

Share

மத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை  இம்மாதம்  30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது ஓதிஷா மாநிலம்.

மத்திய அரசும் அதைத்தான் விரும்பும் . ஏனென்றால் இந்த கட்டுப் பாடுகளுக்கு எல்லாம்  மோடிதான் காரணம் என்ற மாயை விலகும் அல்லவா?

தமிழகம் இன்னும் ஒரு நிலை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

மத்திய அரசு என்ன நிலை எடுக்கப்போகிறது என்று 11 ம் தேதி வரை காத்திருக்க முடிவெடுத்து விட்டார்  எடப்பாடி  .

தெலுங்கானாவும் மகாராஷ்ட்ரா மாநிலமும் ஊரடங்கை நீட்டிப்பதை முடிவு செய்து விட்டனர்.

உண்மையில் இது மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டிய பிரச்னை.   அந்தந்த மாநிலத்தில் என்ன நிலவரம் உள்ளதோ அதைப்பொருத்து மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு வழி காட்டலாம்.

ஆனால் இன்றைக்கு  நிலைமை தலைகீழாகி இருக்கிறது.

எல்லாவற்றையும் மத்திய அரசே முடிவு செய்யும் என்று மாநிலங்கள் காத்திருக்கின்றன.

இக்கட்டான நேரத்தில்  அரசியல் செய்யக் கூடாதுதான். ஆனால் அரசியல் செய்வது யார் என்பதுதான் பிரச்னை. 

மாநிலங்களில் அதிகாரங்களை  பறிப்பதா இப்போது முக்கியம். ஆனால் மருத்துவ அவசர நிலையை  பயன்படுத்தி அதிகாரங்களை பிடுங்கலாமா ?

லட்சக் கணக்கான கோடிகளை அவசர காலத்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ள மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு      நிதியான கேவலம் 7500  கோடியை வைத்துத் தானா செலவுகளை சமாளிக்கப்  போகிறது.மாநிலங்களுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையை தராமல் இருக்க வேண்டிய காரணம் என்ன? மாநிலங்களிடம் இருந்த அதிகாரத்தை பறித்து விட்டு அவர்களுக்கு பிச்சை போடுவதைப் போல் மன்றாட வைத்து விட்டீர்களே இதுவா கூட்டாட்சித் தத்துவம்.?

உயிரா வாழ்வாதாரமா என்று கேள்விக்குறியில் இருக்கிறது ஊரடங்கு நீட்டிப்பு .

நோய்ப்பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டி விடக் கூடாது . எனவே இந்த நேரத்தில் ஊரடங்கை நீட்டிப்பதே அறிவுடைமை.

ஆனால் கணிசமான சமுதாய பிரிவினர் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக சில விதிவிலக்குகளை அரசு பரிசீலிக்கலாம்.

முதலில் சுயமாக முடிவெடுக்க தயாராகட்டும் எடப்பாடி!.

This website uses cookies.