தமிழக அரசியல்

கூட்டணி வேண்டாம் என பொன் ராதாகிருஷ்ணன் சொன்னதின் ரகசியம்?

Share

இன்று மறைமுகமாக தமிழகத்தை மத்திய பாஜகதான் ஆண்டு வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எதிர் பார்த்த வெற்றியை அடையவில்லை. தனித்து நின்றால் என்ன கிடைக்குமோ அதுதான் கூட்டணி வைத்தும் பாஜக வுக்கு கிடைத்தது.

அதுவும் மற்ற கூட்டணி கட்சிகளை வஞ்சித்து ஆளும் கட்சியை மிரட்டி அதிக இடங்களை பெற்றும் இந்த நிலை.  

அதனால் தான் நேற்று பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளிக்கும்போது பாஜக தனித்தே உள்ளாட்சி தேர்தலில் போட்டி  இட்டிருக்கலாம் என்றார். அது அதிமுகவுடன் இருக்கும் அதிருப்தியா அல்லது கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு இல்லையா என்பது பற்றி எல்லாம் எந்த தெளிவும் இல்லை.

ஆனால் அதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது பொன்னார் கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்று தனது  அதிருப்தியை தெரிவித்தார்.

தேமுதிகவிற்கும் அதிமுக பற்றி அதிருப்தி இருக்க்கிறது. விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர் வெங்கடேசன் அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பை சரியாக செய்யவில்லை. 27 மாவட்டங்களில் தேமுதிகவினர் வஞ்சிக்கப்பட்டோம். தேவைப்பாட்டால் தனித்து நின்று ஒட்டு வங்கியை நிரூபிப்போம் என்றார்.                                                                                                                                                    கூட்டணி சேர்ந்தால் வாக்குகளை இழப்பதால் பாஜக தனியாக நிற்பதுபோல் பாவனை செய்து தங்கள் மதவாத வாக்கு வங்கியை பலப்படுத்துவதுடன் பாஜகவின் மறைமுக ஆசியோடு அதிமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்து விட்டால் தாங்கள் மறைமுகமாக ஆளலாம் என்று பாஜக கணக்குப்போட்டு வேலை செய்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன செய்வது? என்ன வேடம் போட்டு வந்தாலும் அடையாளம் கண்டு கொள்கிறார்களே தமிழ் மக்கள்!

This website uses cookies.