தமிழக அரசியல்

இரட்டை இலை கிடைத்ததால் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கு வெற்றியா?!

Share

இரட்டை இலை கிடைத்ததால் அதிமுகவுக்கு வெற்றியா?!

இரட்டை இலை சின்னத்தை  எடப்பாடி ஒபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது.

அது தினகரனுக்கு வேண்டுமானால் பின்னடைவாக இருக்கலாம்.

தமிழக மக்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் என்ன பயன்?

மக்களின் அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்த கட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு இரட்டை இலை எப்படி வெற்றி  பெறும்?

ஆர்கேநகர் தொகுதியில் இரட்டை இலை தோற்றது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்று ஒரு காரணம். இன்று வேறு ஒரு காரணம்.

ஆக தோற்கத் தயாராக இருக்கும் சின்னமே இரட்டை இலை. எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு இரட்டை இலை சின்னத்தின் மீதான பாசம் அதிமுக தொண்டர்களுக்கு  போய்விட்டது.

தினகரனின் தனிக்கட்சி அதிமுக தொண்டர்களை பிரித்து விட்டது உண்மைதான். யாருக்கு எவ்வளவு என்பது தேர்தலில் தான் தெரியும்.

திராவிட இயக்கத்தின் கூறு என்ற முத்திரையை இழந்த அதிமுக எப்படி வெற்றிபெறும்?

This website uses cookies.