Connect with us

பின்லாந்து போய் என்ன கற்று வந்தார் செங்கோட்டையன்?!

sengottaiyan

கல்வி

பின்லாந்து போய் என்ன கற்று வந்தார் செங்கோட்டையன்?!

புதிய கல்வி திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி இருக்கும் நேரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வால் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு 5ம், 8ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு என்பது அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தை கொடுக்கும் என்று எல்லாரும் ஆட்சேபிக்கிறார்கள்.

முடியாதுன் என்று சொல்வதற்கு பதில் முதல்வர் மத்திய அரசுடன் பேசி மூன்றாண்டுகளுக்கு பொது தேர்வில் இருந்து விதி விலக்கு பெற்றிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

மூன்றாண்டுகளுக்கு பின் பிள்ளைகளை வதைப்போம் என்பதைப்போல் இருக்கிறது அமைச்சரின் அறிவிப்பு.

உலகத்தில் சிறந்த கல்வியை பின்லாந்து நாடு தன் குழந்தைகளுக்கு கொடுக்கிறது என்கிறார்கள்.

அங்கே போய் என்ன கற்று வந்தார் செங்கோட்டையன். ?

மத்திய அரசை எதிர்க்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டுவது என்பது எதிர்கால சந்ததியை விலை பேசுவதாகும்.

குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்.

கட்டாயக் கல்வித்திட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை நிறுத்தல் கூடாது என்று இருப்பதை மாற்றுவது புதிய கல்வி திட்டத்தின் நோக்கம்.

பின்லாந்தில் என்ன கல்வி முறை நடைமுறையில் இருக்கிறது என்பதையாவது செங்கோட்டையன் விளக்குவாரா? 

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு முறையை முற்றாக கைவிட வேண்டும் தமிழக அரசு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in கல்வி

To Top