Connect with us

முத்தலாக் தடை அவசர சட்டம்; மோடி அரசின் மோசடித் திட்டம்??!!

muslim-muthalaq

இந்திய அரசியல்

முத்தலாக் தடை அவசர சட்டம்; மோடி அரசின் மோசடித் திட்டம்??!!

ஆடுகள் நனைகின்றனவே என வருத்தப் பட்டு
ஒரு ஓநாய் சிந்திய கண்ணீர்தான்
மோடி அரசு கொண்டு வந்திருக்கும்
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்
என்கிற முத்தலாக் தடை அவசர சட்டம்
முத்தலாக் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று
ஆனால் நடைமுறையில் இருந்ததால் முஸ்லிம் நாடுகள்
பலவும் முத்தலாக் தடை சட்டம் இயற்றி உள்ளன.

ஒரே நேரத்தில் தலாக் மூன்று முறை சொல்லி
விவாகரத்து செய்யும் வழக்கம் தான் தடை செய்யப் பட்டதே தவிர
கால இடைவெளி விட்டு முறைப்படி செய்யப்படும் தலாக்
செல்லுபடியாகும் என்பதே உண்மை
இந்நிலையில் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றி விட்டு
மேலவையில் நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாததால்
அப்படியே விட்டு விட்டு திடீர் என்று கொல்லைபுற வழியாக
பா ஜ க அரசு இந்த அவசர சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?
இப்படி செய்வது தவறு என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2017 ல்
தீர்ப்பு சொன்னது. அப்படி செய்வது அரசியல் சட்டத்தின் பேரால்
நிகழ்த்தப் படும் ஒரு மோசடி என்றும் அது விமர்சித்தது
இந்தக் அவசர சட்டம் கூட ஆறு மாதத்தில் சட்டம் ஆக்கப் படவில்லை
என்றால் காலாவதி ஆகிவிடும். ஆறு மாதம் மார்ச் 2019 ல் வரும் .
அப்போது தேர்தல் நடைமுறை தீவிரத்தில் இருக்கும் .

தானாகவே அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும் . பிறகு
அமைய இருக்கும் புது அரசு மீண்டும் இதை கொண்டுவரவேண்டும் .
அதற்குள் ஏன் இந்த அவசரம் மோடிக்கு?
பிரச்சாரம் செய்ய வேண்டும். முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பில்
எங்களுக்கு தான் அதிக அக்கறை . மற்றவர்கள் எல்லாம்
பேசுவார்கள். நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்று கொஞ்சம்
பேரையாவது இழுக்க முடிந்தால் வெற்றிதானே!
அகில இந்த முஸ்லிம் தனி சட்ட வாரியம் பிரதமருக்கு
கடிதம் எழுதுகிறது . ஐயா நாங்கள் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்
ஆனால் அதில் உள்ள சில குறைகளை களைந்து திருத்துங்கள் என்று.
பிரதமர் இடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

உண்மையில் ஒரு முஸ்லிம் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்ய
தலாக் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வேண்டும் என்றால்
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டால் முதல் மனைவி
அதற்காக குற்றம் என நடவடிக்கை எடுக்க முடியாது. தனக்கு தேவையான
ஜீவனாம்ச துகையை மட்டும் கோரிப் பெறலாம்.
மனைவியும் குலா சொல்லி விவாக ரத்து செய்ய முடியும்.
கணவனை மூன்றாண்டு தண்டனைக்கு உள்ளாக்கி விட்டு மனைவி
தன் குழந்தைகளுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
நீதிபதியிடம் முறையிட்டு ஜாமீன் பெறலாம் என்ற திருத்தம்
மனைவியின் கருத்தை கேட்டு என்ற அம்சத்தில் அடிபட்டு போகிறது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் அவசர சட்டம் கொண்டு வருகிற
அவசியம் கண்ணுக்குத் தெரியவில்லை.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு ஒரு கருவியாக இது விளங்க வேண்டும்
என்ற பா ஜ க வின் எதிர்பார்ப்பு எதிர்வினையை தான் ஏற்படுத்தும்.
மீண்டும் இந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தி முஸ்லிம் வாக்கு
வங்கியிலும் ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சியே இது
பழுதுபட்ட நோக்கம் கொண்ட எந்த சூழ்ச்சியும் வெற்றியை தராது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top