தமிழக அரசியல்

பெரியாரை இழிவு படுத்த இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சாதிபெயருடன் பிழையான வினாத்தாள்?!

Share

பெரியாரை இழிவு படுத்த என்றே ஒரு கூட்டம் அலைகிறது.

தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தப் பட்ட குரூப் 2 தேர்வுத் தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று ஒரு கேள்வி.

அதற்கு 1. இ.வெ.ராமசாமி நாயக்கர் 2. ராஜாஜி  3. காந்திஜி  4. சி.என் அண்ணாதுரை என்று பதில் தயாரித்திருக்கிறது ஆணையம்.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் ஈ.வெ.ரா. என்பது கூட தெரியாமல் கேள்வித்தாள் தயாரித்திருப்பார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

தெரிந்தே தான் இழிவு படுத்தியிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதையும் சாதி ஒழிப்பையே லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் பெரியார். சாதிக்கு மூலமாக மதம் இருப்பதால்தான் மதத்தையும் அதற்கு மூலமாக இருக்கும் கடவுளையும் நிராகரித்தார். தன்னை சாதி ஒழிப்பு கிளர்ச்சிக்காரன் என்றே அடையாளப்படுத்திகொண்டார்.

அப்படிபட்டவரும் சாதி உணர்வாளர்தான் என்று நிலை நாட்ட முயற்சிக்கிறார்கள்.  இதைவிட அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்?

அதிலும் ராஜகோபாலாச்சாரியை ராஜாஜி என்றும் மகாத்மா காந்தியை காந்திஜி என்றும் குறிப்பிட்டவர்கள் அண்ணாவை சி என் அண்ணாதுரை என்றும் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் கேள்வி தயாரித்தவர்கள் மனதில் எத்தனை வன்மம் இருந்திருக்க வேண்டும்.?

அண்ணா என்று குறிப்பிடவும் பெரியார் என்று எழுதவும் அவர்களுக்கு மனமில்லை.

இதற்கு ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் வருத்தம் தெரிவித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்  படும் என அறிவித்திருக்கிறார்.    வினாத்தாள் தயாரிக்கும் பணி அனுபவம் மிக்க பேராசிரியர்களால் தயாரிக்கப் பட்டு மேலும் பலரால் சரி பார்க்கப் பட்டு பின்னால்தான் இறுதி  செய்யப் படுகிறது. அதில் எப்படி  இந்த தவறு தெரியாமல் நடந்திருக்க முடியும்?

மேல்சாதி வெறியர்கள் யார் இந்த பணியில் இருந்தார்கள் என்று ஆய்ந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இது போன்று செய்ய முடியும் என்ற எண்ணமே எழாமல் செய்ய முடியும்.

தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

இதுபற்றி அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க வில்லையே ஏன்?

This website uses cookies.