தமிழக அரசியல்

பால் விலையை உயர்த்தியதன் காரணம் என்ன?!

Share

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கும் எருமைப்பாலுக்கும் ரூபாய் 4, 6 என்று உயர்த்தி விட்டு நுகர்வோருக்கு மொத்தமாக ரூபாய் 6 உயர்த்திவிட்டது.

இனி டீ பத்து ரூபாயிலிருந்து 13, 15 என்று உயர்ந்து விடும். பாலுடன் இணைந்த தயிர், மோர், பாலாடை, நெய் என்று எல்லாமும் ஏறும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கே விலை உயர்வு குறைவு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார்.

கர்நாடகத்தில் அரசு லிட்டருக்கு ரூபாய் 6 கொடுக்கிறதே அங்கே அரசு பால் விநியோகம் 80% தனியார் 20% என்ற விகிதத்தில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் அரசு 40% தனியார் 60% என்ற விகிதத்தில் இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் என்ன?

அரசின் அணுகுமுறை தனியாருக்கு ஆதரவாகவே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு ராஜேந்திர பாலாஜி தனியார் பாலில் கலப்படம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவில் இருக்கிறது என்று அச்சம் தெரிவித்தார். தனியார் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ அவர்கள் நீதிமன்றம் சென்று இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று தடை வாங்கிவிட்டார்கள்.

அமைச்சர் தன் வாக்கை நிரூபிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

அரசு பாலில் வணிகர் போல நடந்து கொள்ளகூடாது. லாப நட்டம் இல்லா வகையில் நுகர்வோர் துயருறா வகையில் உயர்த்த முடியாதா?

பெட்ரோல் டீசல் விலை நாளும் ஏறி இறங்கி கொண்டுதான் இருக்கிறது. மக்கள் பழகிப்போய் விட்டார்கள். அதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினால் கூட பழக்கப்பட்டு விடுவார்கள். திடீர் என்று ஏற்றினால் தடுமாறத்தான் செய்வார்கள்.

எல்லாவற்றையும் விட கொடுமை முதல்வர் பழனிசாமி இந்த விலையுயர்வால் சாமானியர்கள் ஒன்றும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்னாரே அதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஏதோ ஒருவகையில் இந்த உயர்வு தனியாருக்கு லாபம் தருமோ?

என்ன தவம செய்தோமோ இப்படி ஒரு முதல்வரை பெறுவதற்கு?

This website uses cookies.