தமிழக அரசியல்

9 கோடி ஊழலுக்கு ஆதாரம் கொடுத்த மு க ஸ்டாலின்! தடுமாறும் அமைச்சர் தங்கமணி!!

Share

உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில்
Rs.9,17,03,379/- ஒன்பது கோடியே பதினேழு லட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எழுபத்து ஒன்பது ருபாய்
மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக
போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள
திருநெல்வேலி மண்டல ஆடிட் உதவி அதிகாரி
தனது அறிக்கையில் சொல்லியிருப்பதை ஆதாரமாக காட்டி
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த ஊழல் குறித்து
குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே அதிகாரி இந்த ஒன்பது கோடி ரூபாயை வட்டியுடன்
உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பதில் கூறிய அமைச்சர் தங்கமணி கூடுதலாக கூறியது
‘ இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்’
‘ மின்சார வாரியத்தில் இருந்து இந்த பணமும் கொடுக்க வில்லை’ என்பது. பின்னர் ஏன் தனியார் கம்பெனிகளுக்கு ஒன்பது கோடி வட்டியுடன் கேட்டு
அறிவிப்பு கொடுத்தீர்கள்? அவர்கள் ஏன் நீதிமன்ற தடை வாங்கினார்கள்?
அனல் மின் நிலையத்தில் உற்பத்தியான மின்சாரத்தை
தனியார் கம்பெனிகள் வாங்கியதில் நடந்த தவறை
மின்சார வாரியத்துடன் இணைக்க பார்க்கிறார்கள் என்பதுதான்
அமைச்சர் தங்கமணியின் வாதம்.

அடுத்த வரியிலேயே மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை
செலுத்துமாறு நோட்டிஸ்தான் அனுப்பியிருக்கிறோம் என்றால்
நோட்டிஸ் சரியா தவறா?
சரி என்றால் ஊழல் உண்மை.
இல்லை என்றால் ஏன் அப்படி பொய் நோட்டிஸ் அனுப்ப வேண்டும்?
வழக்கு தொடருவோம் என அமைச்சர் கூற,
தொடர வில்லையென்றால் நான் வழக்கு தொடர்வேன் என ஸ்டாலின் பதில் கொடுக்க
தங்கமணி என்ன செய்ய போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

This website uses cookies.