தமிழக அரசியல்

7 பேர் விடுதலை; இன்று உச்சநீதிமன்றம் சொன்னதைத்தானே இத்தனை ஆண்டுகளாய் கேட்டோம்?!!

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும்
அரசியல் சட்டம் மாநில ஆளுநருக்கு வழங்கியிருக்கிற
பிரிவு 161 ன் படி விடுதலை செய்யுங்கள் என்றுதான்
இத்தனை நாளும் திமுக பாமக ,விடுதலை சிறுத்தைகள்,
மதிமுக நாம் தமிழர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட
அத்தனை பேரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஜெயலலிதா தேவையில்லாமல் சட்ட மன்றத்தில்
மத்திய அரசின் அனுமதியோடோ அனுமதி இல்லாமலோ
ஏழு பேரையும் விடுதலை செய்வோம் என்று அறிவித்து
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை பெற வழி செய்தார்.

அதற்குப் பிறகும் தேவையில்லாமல்
குற்ற விசாரணை சட்ட பிரிவுகள் 432 433, மற்றும் 435 ன் படி
மத்திய அரசின் ஒப்புதல் வேண்டுமா தகவல் தெரிவித்தால் போதுமா
என்ற விவாதத்திலேயே இத்தனை ஆண்டுகளாய் இந்த பிரச்னை
உச்ச நீதிமன்ற பரிசீலனையில் இருந்து வந்து
இன்று ஒரு முடிவை எட்டியிருக்கிறது.
உச்சநீதி மன்றம் இன்று தமிழக ஆளுநர்
தன்னிடம் அளிக்கப் பட்டிருக்கும் கருணை மனு மீது
முடிவெடுக்க உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக அரசு உடனே அமைச்சரவையை கூட்டி
விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு
அனுப்பினால் அவர் அனுமதி அளித்து தான் ஆக வேண்டும்.
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் அவர்களை விடுவித்தால்
‘ மிகவும் மோசமான முன் உதாரணம் ஆகிவிடும்’ என்றும்
‘ சர்வதேச பின்விளைவுகள் ‘ ஏற்படும் என்றெல்லாம் கூறி
விடுதலையை எதிர்த்தது.

இப்போதும் ஆளுநர் தன் முடிவை எடுக்க மத்திய அரசு
தன் அதிகாரத்தை செலுத்த முடியாது என்றாலும்
புற வழிகளில் தாமத படுத்த முனையலாம்.
அதற்கு இடம் கொடுக்காமல் உடனடியாக தமிழக அரசு
அமைச்சரவையை கூட்டி தீர்மானம் இயற்றி
ஆளுநருக்கு அனுப்ப வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.
குட்கா விவகாரத்தில் சிக்கி தவிக்கும் தமிழக அரசுக்கு
இதற்கு நேரம் இருக்க வேண்டுமே?!
அல்லது இதற்கும் மத்திய அரசின் அனுமதியை
எதிர்நோக்கி காத்திருப்பார்களா ?

This website uses cookies.