தமிழக அரசியல்

பெரியார் பிறந்த நாள் விழாவை சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் சூழ்ச்சி ??!!

Share

தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் இன்று.
பகுத்தறிவுப் பகலவன் என்னும் ஈ வே ரா தமிழ் மண்ணில் தோன்றியிராவிட்டால்
தமிழர்கள் இன்னும் பலகாலம் அடிமைகளாகவே வீழ்ந்து கிடந்திருப்பர்கள்.
அகில இந்தியாவிலும் பகுத்தறிவு சுடர் ஒளிவிட பெரியார் தான் காரணம்
எந்த பகுத்தறிவாளரும் பெரியாரை குறிப்பிடாமல் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.

பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் இந்த மண்ணில் கொண்டாடப் படும்வரை
தாங்கள் கால் பதிக்க முடியாது என்பதை
சங்கப் பரிவாரங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை இழிவு படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பா ஜ க வின் எச் ராஜா பலமுறை மேடைகளில் பெரியாரை இழிவாக பேசியிருக்கிறார்.

பெரியார் தான் வாழ்நாளில் பல செருப்பு வீச்சுக்களை எதிர் கொண்டவர்
ஒரு செருப்பு வீசப்பட்டவுடன் எங்கே மறு செருப்பு என்று தேடியவர் அவர்
அதனால் தான் அவரை இன்று பட்டி தொட்டியெங்கும் சிலைகளை வைத்து
தமிழ் சமூகம் நினைவு கூர்கிறது.
புத்தக கண்காட்சிகளில் பெரியார் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

எதிரிகளும் வியக்கும் பெரியார் மதிக்கப் பட காரணம்
தன்னை எவரும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை அவர் விரும்பவில்லை.
நான் சொல்கிறேன் நீ சிந்தித்து முடிவெடு என்பதுதான் அவர் விரும்பியது
இன்று ஒரு பா ஜ க ஆதரவு வக்கீல் ஒருவன் பெரியார் சிலை மீது
காலணி வீசியிருக்கிறான் . அருகில் இருந்த வி சி க தொண்டர்கள்
அவனை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

திருப்பூர் தாராபுரத்தில் பெரியார் சிலை மீது காலணிகளை வைத்திருக்கிறார்கள்
நேற்றுத்தான் காவல்துறையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய வழக்கில்
எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப் பட்டிருக்கிறது.
அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவாகி இருக்கிறது.
கலவரத்தை தூண்டும் வகையில் அவர்கள் பேசுவதால் தான் இப்படி
பெரியார் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இப்போது இருக்கும் ஆட்சி நம் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் எவ்வளவுதான் பதவி போட்டி இருந்தாலும்
திராவிட இயக்கங்கள் பெரியாரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
என்பதையும் இந்த சம்பவங்கள் நிருபித்திருகின்றன
அ தி மு க அமைச்சர் ஜெயக்குமார் பெரியாரை இழிவுபடுத்துவதை
சகித்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி நடவடிக்கை உறுதி என்றிருக்கிறார்.
பெரியாரியம் நிச்சயம் வெல்லும்.
மதவாதம் மண் கவ்வும்

This website uses cookies.