தமிழக அரசியல்

ஓட்டுக்கு ரூ 6000-வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்??!!

Share

என்ன முயன்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை.

ஓட்டுக்கு ரூ 6000 இலக்கு வைத்து  இ பி எஸ் -ஒபீஎஸ் அணி ஆர் கே நகரில் காவல் துறையை வைத்தே விநியோகம் செய்து வருகிறது.

எத்தனை பார்வையாளர்கள் இருந்தென்ன?

இப்படி ஒரு தேர்தல் தேவைதானா?

என்ன செய்தால் இந்த அக்கிரமங்களை தடுக்க முடியும்?

காங்கிரஸ் , இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம தி மு க , முஸ்லிம் லீக் , என்று எல்லா அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போட்டியிடும் திமுக சாதாரணமாக வெற்றி பெற வேண்டிய தேர்தல் இது.

45000    போலி வாக்காளர்களை நீக்கி இரண்டாயிரம் இரட்டை பதிவுகளை நீக்கி திமுக பெரிய தில்லுமுல்லு நடக்க இருந்ததை தடுத்து விட்டது என்று இருந்த நிலையில் யார் என்ன செய்தால் என்ன எங்களிடம் இருக்கும் பணத்தால் எல்லாவற்றையும் முறியடிப்போம் என்று மார் தட்டுகிறார்கள் ஆளும் கட்சியினர்.

தினகரன் ஆட்களை காவல் நிலையத்தில் வைத்து பிரச்சாரம் செய்ய விடாமல் செய்கிறார்கள்.

பா ஜ க போட்டியிடுவதைப்போல் நன்றாக நடிக்கிறது.

மீண்டும்  தேர்தலை தள்ளி வைத்தால் கூட நல்லது என்ற நிலையை ஆளும் கட்சி உருவாக்கி விட்டது.

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடக்காது என்பது நிதர்சனமாக தெரிந்து  விட்டது.

இன்னும் மூன்று நாளில் எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் சரி செய்து விடும் என்று எதிர்பார்ப்பது  அறிவீனம்.

சகித்துக் கொண்டு அடுத்த தீர்வை நோக்கி நகர்வது தான் யதார்த்தம்.

காந்தி ஒரு முறை சொன்னாராம்.     கற்பழிப்பை தடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று.  உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

இப்போது ஆர் கே நகரில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

This website uses cookies.