தமிழக அரசியல்

இலங்கை அகதிகளை தற்கொலை முயற்சிக்கு தள்ளி விடும் கொடுமை நிற்குமா?!

Share

திருச்சியில் இலங்கை அகதிகள் இருபது பேர் தற்கொலை முயற்சி என்ற செய்தி நம் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சுவது போல் இருக்கிறது.

அந்த செய்தியில் உண்மை இருக்குமானால் இதைவிட கொடுமை இருக்க முடியுமா?

அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க என்ன தடை? ஏன் அவர்கள் அகதிகளாக நீடிக்க வேண்டும்?

இதுபற்றி சரியான தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு  இருக்கிறது. அரசின் மௌனம் எதைக் காட்டுகிறது.?

இலங்கையில் தான் கொடுமைப் படுத்தப் பட்டார்கள் என்றால் புகலிடம் தேடி வந்த இங்குமா?

தமிழகம் தமிழர்களின் தாயகம் என்பது உண்மையானால் இப்படி நடக்குமா?

இந்தியா நமது நாடு. அயல்நாட்டில் இருந்து வந்தாலும் இனத்தால் அவர்களும் தமிழர்கள் தானே?

மியான்மரில், வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது. அதில் இலங்கை தமிழ் அகதிகள் மட்டும் விலக்கா என்ன?

This website uses cookies.