தமிழக அரசியல்

பண மழையில் கேலிக்கூத்தாகும் பொதுத்தேர்தல் ??!! நிமிர்ந்து நிற்குமா மக்கள் சக்தி!!??

Share

ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

இரண்டு நாளாக பொழியும் பண மழை வாக்காளர்களை முற்றிலும் நனைத்து வருகிறது.

வரும் செய்திகள் நன்றாக இல்லை.

பணம் கொடுப்பது கொள்ளையடித்தவர்கள் என்றால் அது ஏன் இன்னும் எனக்கு வரவில்லை என்று கேட்பவர்கள் கொள்ளையில் பங்கு கேட்பவர்கள் அல்லவா?   

எங்கும் பணம் கொடுக்க வந்தவர்களை மக்கள் விரட்டி அடித்தார்கள் என்ற செய்தி வரவில்லையே?

அந்த நல்ல செய்தி வந்தால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.

தேர்தல் ஆணையம் ஓரணியில் நின்றுவிட்டது. அவர்களை இனி மாற்ற முடியாது.

உயர் நீதிமன்றம் கைவிரித்து விட்டது. அதிகாரமில்லை தேர்தலை நிறுத்த.

கடைசி நம்பிக்கை மக்கள் சக்தி. அது விழித்து எழுகிறதா என்பது மட்டுமே ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.

This website uses cookies.