இந்திய அரசியல்

மோடி கருணாநிதியை சந்தித்தது பண்பாடா அரசியலா?

Share

தினத்தந்தி பவள விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று கலைஞரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் கலைஞர் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்து திரும்பி இருக்கிறார்.

மோடி கலைஞரை சந்தித்தபோது மற்றவர்களுக்கு இருந்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்ததாக தெரியவில்லை.    ஏனென்றால் அவர் மோடி சென்ற பின் வீட்டிற்கு வெளியில் வந்து தொண்டர்களை சந்தித்து சிரிப்புடன் கைகளை அசைத்து வெளிப்படுத்திய மகிழ்ச்சி மோடியை சந்தித்தபோது இல்லையே ஏன்?

எட்டாம் தேதி மோடி   அரசின் செல்லாத நோட்டு  பிரச்னையில் கருப்பு நாளாக திமுக அனுசரிக்கிறது.     அதுவும் அகில இந்திய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து.        இந்த நேரத்தில் பிரதமர் கலைஞரை சந்தித்தால் மட்டும் அரசியல் மாற்றம் வந்துவிடும் என்று சிலர் ஆரூடம் சொல்வது நகைப்புக் குரியது.

அதிமுக பொம்மை அரசை வழி நடத்தி செல்லும்  பா ஜ க அதனுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் காலூன்ற திட்டமிடும்  வேளையில் மடை மாற்றம் செய்து அணி மாற்றம் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

தன்னை ஒரு பண்பாடான பிரதமராக காட்டிக் கொள்ள விரும்பி இருக்கிறார் மோடி என்பதே உண்மை.     அது பாராட்டத் தக்க பண்புதான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஏழாம் தேதி  2 G  வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப் பட இருக்கிறது.        அதில் என்ன வருகிறதோ அது மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் அதை ஒப்புக் கொள்ளலாம்.

முன்பு இதேபோல்  தீர்ப்புக்கு முன் அருண் ஜைட்லி ஜெயலலிதாவை வந்து பார்த்து சென்ற போது  அதன் பின் வந்த தீர்ப்பு அவருக்கு எதிராகத்தான் இருந்தது.

ஏன் ஜெயலலிதாவை வீடு தேடி சென்று சந்திக்க வில்லையா மோடி?

வெறும் சந்திப்பின் மூலமே அரசியல் மாற்றங்கள் வரும் என்பது  வெறும் ஊகமே.

பண்பாடு வளரட்டும் !   அரசியல் தொடரட்டும்!!!

 

This website uses cookies.