Connect with us

மைனாரிட்டி எடப்பாடி அரசை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசு?! நீடிக்குமா இந்த அநீதி??

modi eps ops

Latest News

மைனாரிட்டி எடப்பாடி அரசை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசு?! நீடிக்குமா இந்த அநீதி??

தினகரன் அணியை சேர்ந்த   19  சட்ட மன்ற உறுப்பினர்கள் எடப்பாடி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ஆளுநர் வித்யா சாகரிடம் மனு கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே இருந்த  122  உறுப்பினர்களுடன்  ஓ பி எஸ் அணியை சேர்ந்த    11   பேரையும் சேர்த்தால்  வரும் 133  உறுப்பினர் களில்  19  பேர் ஆதரவு இல்லையென்றால்  114  ஆகிறது.      எனவே  தேவைப்படும்   117  உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் எடப்பாடி அரசு மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது.

ஆளுநர் உடனே சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க எடபாடிக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.

வாங்கிக்கொண்டு எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் மும்பைக்கு பறந்து  விட்டார் ஆளுநர்.

தனது ஆதரவு உறுப்பினர்களை புதுச்சேரியில் தங்க வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தினகரன் ஆளானார்.

மேலும் இரண்டு உறுப்பினர்கள் தினகரன் அணிக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் .

இந்நிலையில் குதிரை பேரம் நடத்தவும் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கவும் எடபாடிக்கு அவகாசம் அளித்து ஆளுநர் மௌனம் காக்கிறார்.

நம்பிக்கை தீர்மானத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ பி எஸ் ஆதரவு உறுப்பினர்கள் மீது ஏன் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க வில்லை?      அப்போது பிரச்னையை கிடப்பில்  போட்ட சபா நாயகர் இப்போது உடனே நோட்டிஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இது அப்பட்டமான சதி மட்டுமல்ல அரசியல் சட்ட மோசடி.

பா  ஜ க வின் சுய ரூபத்தை மக்கள் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

பிளந்து கிடக்கும் அடிமைகளை மௌநிகளாக்கி அதிகாரத்தில் பங்கு போட பா ஜ க தயாராகி விட்டது.

தகுதி இழப்பு செய்தால் சட்டப்படி செல்லாது என்றாலும் அத்தகைய உத்தரவை பெற நீதி மன்றம் சென்று முறையிடவும் தீர்ப்பு பெறவும் ஆகும் கால அவகாசத்தில் எடப்பாடி தனது பண பலத்தை பயன் படுத்தி பதவியை தக்க வைத்துக்  கொள்ள  பா ஜ க மறைமுகமாக உதவுகிறது.

தமிழர்களை எப்படியும் ஆட்டி வைக்கலாம் என்பது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வுக்கு தெரிகிறது.

இத்தனை அடி வாங்கியும் பா ஜ க தான் தங்களை மிரட்டுகிறது  என்று தினகரன் இன்று வரை  வெளிப்படையாக குற்றம் சாட்ட தயாராக இல்லை.

நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தங்களை பழி வாங்கி  விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.

அதனால்தான் பா ஜ க வின் முகமூடி கிழித்து அருமையாக கவிதை எழுதிய  மருது அழகுராஜை   நமது எம்ஜியார் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டனர்.

எல்லா வற்றையும் மீறி பொது மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்து விட்டனர்.

ஒரு நிமிடம் கூட தொடரக் கூடாத அரசாக எடப்பாடி அரசு மாறி விட்டது.

அ தி மு க வின் உட்கட்சி  பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட்டு அரசியல் செய்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம்.    தேர்தல் கமிஷன் தானாகவா  செய்தது?   பா ஜ க பின்புறத்தில்  இல்லையா?

மீண்டும்  தேர்தல் வந்து உண்மையான மக்கள் ஆட்சி  அமைந்தால் தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top