Connect with us

உலகநாடுகளுக்கு இந்தியா இனி சொந்த நாடு- 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி அடிமை சாசனமே???!!!

obama-modi

Latest News

உலகநாடுகளுக்கு இந்தியா இனி சொந்த நாடு- 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி அடிமை சாசனமே???!!!

ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற அரசியல் சுதந்திரம் இனி ஏட்டில் மட்டும் இருக்கும்.  வியாபார ரீதியில் மீண்டும் அந்நியர்களிடம் உலக நாடுகளுக்கு விற்கப் பட்டு விட்டது மோடி அரசால்.

100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியால் இந்தியாவில் இனி எந்த நாடும் இந்திய சந்தையை வசப் படுத்திக் கொள்ள முடியும்.

மேக் இன் இந்தியா என்று சொல்லிக் கொண்டே இந்தியாவை விற்று விட்டார்கள்.

வெளிநாட்டவர்களோடு போட்டி போட்டு வணிகம் செய்யும் தகுதி இந்தியர்களுக்கு இருக்குமா?

முதலீட்டை ஈர்ப்பதுதான் நோக்கம் என்றால் விற்பனை என்றுதானே பொருள்.   முதலீடு செய்து இங்கு வணிகம் செய்து லாபத்தை எடுத்துக் கொள் என்றால் உள்நாட்டு வணிகர்கள் தேவையில்லை என்று நாமே

சொல்லுக்கும் செயலுக்கும் இருக்கும் வேறுபாடுதான் பா ஜ க. வின் உண்மை சொரூபம்.

அவர்களின் சுதேசி ஜாக்ரன் மஞ்ச அமைப்பு இது உள் நாட்டு உற்பத்திக்கு சாவு மணி அடிக்கும் செயல் என்றும் மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்றும் கண்டித் திருகிறது.

பாதுகாப்பு துறையில் முழு அனுமதி என்பது இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காதது.   அமெரிக்க ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு இது ரத்தின கம்பளம் விரிக்கும் செயல் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி சாடியுள்ளார்.

விமான போக்குவரத்து , மருந்து தயாரிப்பு  சிங்கிள் பிரான்ட் சில்லறை வர்த்தகம் ,பாதுகாப்பு துறை, ஒலிபரப்பு துறையில் கேபிள் டி வி நெட்வொர்க்  எல்லாம் இனி வெளிநாட்டவர் ஆக்ரமிப்பு  பூரணமாகிவிடும். .

அரசியல் விடுதலை பெற நடத்திய போராட்டத்தை விட பெரிய போராட்டத்தை நடத்திதான் இனி வணிக சுதந்திரம் பெற முடியும் .      சுதேசி என்ற வார்த்தையை உபயோகிக்கும் தகுதியை பா ஜ க இழந்து விட்டது.

நாட்டை மற்றவர்கள் சுரண்ட அனுமதிக்க ஒரு அரசு தேவையா???

மறு பரிசீலனை செய்ய வேண்டிய ஆபத்தான முடிவு இது!!!!!

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top