Connect with us

மாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் ?!!

hindu-maha

மதம்

மாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் ?!!

இந்து மகா சபையினர் வீர சவர்க்கார் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

ஆக்ராவில் நடைபெற்ற விழாவில் இந்து மகாசபையினர் பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கத்திகளை வழங்கினார்கள்.

இந்து மகாசபை செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே என்பவர் வீர சவர்காரின் கொள்கைகளை விவரித்து பேசினார்.

‘அரசியலை இந்து மயமாக்குவதும் இந்துக்களை போராளிகளாக்குவதும்தான் ‘(Hinduisation of politics and Militarisation of Hindus) வீர சவர்காரின் லட்சிய கனவு என்றவர் பிரதமர் மோடி சவ்ர்காரின் முதல் கனவை நினைவாக்கிவிட்டார் என்று புகழ்ந்து பேசினார். அதாவது அரசியலை இந்து மயமாக்கி விட்டாராம் மோடி.  எனவே இந்துக்களை போராளிகளாக்கும் அடுத்த கனவை நாம் நினைவாக்குவோம்  என்றவர் மாணவர்களுக்கு கத்தி விநியோகிப்பதன் நோக்கம் மாணவர்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்வதும் நாட்டை பாதுகாப்பும் நோக்கம் என்றால் அவர்களுக்கு இந்த ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

அது மட்டுமல்ல இளவர் மாணவ மாணவிகளுக்கும் கத்தியுடன் பகவத் கீதை  புத்தகத்தையும் அவர் விநியோகித்தார்.

இதையெல்லாம் அனுமதிக்கும் அரசுதான் அங்கே ஆட்சி புரிகிறது.

குழந்தைகளின் மனதில் இப்படியெல்லாம் விஷ வித்தை தூவுகிறோமே என்ற குற்ற உணர்வு அவர்களுக்கு இல்லவே இல்லை.

இதெயெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களை இங்கே வளரவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள்.?

பாஜக அதிகாரபூர்வமாக இந்த நடவடிக்கைகளை ஆதரித்து அறிக்கை விட தயாரா?

எப்படி விடுவார்கள்? மோவ் தொகுதி பா ஜக சட்டமன்ற உறுப்பினர் உஷா தாகூர் கோட்சே பற்றி கேட்டதற்கு ‘அவர் ஒரு தேசியவாதி’ என்று பதில் சொல்லி இருக்கிறார்.

பிரக்யா சிங் கோட்சேயை தேச பக்தி கொண்டவர் என்று சொன்னதை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னவர் மோடி. அதற்குப் பிறகு பிரக்யா சிங் எம்பி ஆகி விட்டார். இவர்களா கண்டிப்பார்கள்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top