கமலை தூக்கில் போடு அல்லது சுட்டுக்கொல் ! பேசிய இந்து மகாசபை தலைவர் மீது என்ன நடவடிக்கை? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம் ?

கமலை தூக்கில் போடு அல்லது சுட்டுக்கொல் ! பேசிய இந்து மகாசபை தலைவர் மீது என்ன நடவடிக்கை? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம் ?

இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது என்று கமல்ஹாசன் ஒரு கருத்து கூறியிருந்தார்.

ஆனந்த விகடன் சமீப காலமாக கமல் ஹாசனின் கருத்துக்களை மிகப் பெரிய அளவில் விளம்பரப் படுத்தி வருகிறது.    அவரை ஒரு சமுதாய விஞ்ஞானி போல் காட்ட மிகவும் மெனக்கெடுகிறார்கள் .

இதற்காக உ பி யில் வாரனாசி   காவல்  நிலையத்தில் மூன்று பிரிவுகளில் புகார் பதிவாகியுள்ளது.   தமிழ் நாட்டிலும் சில இடங்களில் புகார்கள் தரப் பட்டுள்ளன.

அதற்கு இந்து மகா சபை தலைவர் அசோக் சர்மா ‘ கமல்ஹாசன் போன்றவர்களை கையாளுவதற்கு வேறு வழியே இல்லை. அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும் ‘ என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு கமல் சிறையில் இடம் இல்லையென்றால் சுட்டுக்கொல்ல வேண்டியதுதானே என்று பதிலும் கொடுத்தார்.

அதாவது கமல் காசனை  தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவகப் படுத்தும் வேலைகள் மிக நன்றாக நடக்கின்றன.

நாடகம் மிக நன்றாக நடக்கிறது.  மற்றவர்கள் இப்படி பேசி இருந்தால் காவல் துறை சும்மா இருக்குமா?

சர்மா பேசியது தவறு  என்றும் மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டி காட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி அவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.  ஆனால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றால் அவர்கள் பேசுவது கமலுக்கு முக்கியத்துவத்தை உயர்த்த முனைகிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதுதான்.

அதைப்போலத்தான் சுப்பிரமணிய சாமி கமலை பொறுக்கி என்பதும் ஆமாம் நான் நல்லவற்றை பொறுக்குகிறேன் என்று இவர் விளக்கம் சொல்வதும்.

அசோக் சர்மா மீது வழக்கு பதியட்டும் . நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளட்டும். அப்போது பார்க்கலாம் இவர்கள் செய்வது  பேசுவது எல்லாம் உண்மையா அல்லது நாடகமா என்பதை??