தமிழக அரசியல்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது!! அன்புமணி-தமிழிசை சண்டை தேவையா?

Share

இந்தியாவில் அறிவிக்கப் பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எத்தனை செயல்  பாட்டுக்கு வந்திருக்கிறது?

இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கு முன் தமிழ் நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது  பா ஜ க வாலா பா ம கா வாலா என்ற வாதம் தொடங்கி விட்டது.

தான்   2008 லேயே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உத்தரவிட்டு நிதி ஒதுக்கியதாகவும் அதன் பின் பதவி விலகியதால் மேற்கொண்டு தொடர முடியவில்லை என்றாலும் தன்னால்தான் மதுரையில் எய்ம்ஸ் வந்தது என்றும் அன்புமணி  ராமதாஸ் உரிமை கோர , பின் எதற்காக நீங்கள் எய்ம்ஸ் தர்மபுரியில் அமைய வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள் என்றும் தமிழிசை கேள்வி கேட்க , முன்னால் நாம் சொன்ன எப்போது எய்ம்ஸ் அமுலுக்கு வரும் என்ற கேள்வி பின்னுக்கு போய் விட்டது.

வரும் முன் தமிழ்நாட்டில் மதுரை , செங்கிப்பட்டி, வேலூர், தர்மபுரி , திருச்சி என்று போட்டி இருக்கலாம்.  வந்தபின் அதன் நடைமுறை பற்றி சிந்திப்பதே நல்லது.

தென் மாவட்டங்களை பா ஜ க குறி வைக்கிறது .

தேவேந்திர குல வேளாளர் , வன்னியர் என்று  சாதி ரீதியாக வளைத்துப் போடப்  பார்க்கிறது.   அதுவே பா ஜ க – பா ம க இடையே உரசல் ஏற்பட காரணம்.

இதில் பா ஜ க வெற்றி பெறுமா என்பது வேறு.

என்ன காரணங்களுக்காக எய்ம்ஸ் வந்திருந்தாலும் வந்ததை வரவேற்போம்.

This website uses cookies.