தமிழக அரசியல்

ஈழத் தமிழர்களை கைவிட்ட எடப்பாடி – ஒபீஎஸ் கூட்டணி?

Share

குடிஉரிமை சட்ட திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேறிவிட்டது.

மற்றவர்களைப்போல் இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து அவர்களுக்கும் குடிஉரிமை வழங்க வேண்டும் என்று ஆந்திராவின் ஒய் எஸ் ஆர் கட்சி கூட குரல் கொடுத்தது.

திமுக எம்பிக்கள் உரத்துக் குரல் கொடுத்தார்கள்.

ஆறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு  கொடுக்கபட்ட சலுகை முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப் பட்டது.

இலங்கையில் மத ரீதியிலும் மொழி ரீதியிலும் இன ரீதியிலும் அடக்கு முறைக்கு  உள்ளானவர்கள் அகதிகளாக இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களுக்கு குடிஉரிமை தர முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். அமித் ஷா அது வேறு பிரச்னை என்கிறார்.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திர நாத் கூட இதைப்பற்றி  பேச மறுக்கிறார்.

மாநிலங்கள் அவையிலும் எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் மட்டும் ஏன் இலங்கை தமிழர் களுக்கு  இந்த உரிமையை வழங்கக் கூடாது என்று  கேட்டார். ஆனால் அதிமுக ஆதரித்து வாக்களித்து விட்டது.

ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தாததின் மூலம் தன் பாஜக விசுவாசத்தை அதிமுக நன்றாக வெளிக்காட்டிவிட்டது.

This website uses cookies.