தமிழக அரசியல்

தள்ளாடும் எடப்பாடி அரசு கையில் எடுக்கிறது அடக்குமுறையை ??!! யோகேந்திர யாதவ் கைதாகி விடுதலை ?!!

Share

எடப்படியின் அரசு இன்னும் எத்தனை நாள் நீடிக்குமோ
என்றுதான் நாட்களை எண்ணி வருகிறது
இவர்களுக்கு ஏன் அடக்குமுறை ஆசை ?
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறது
10000 கோடி செலவு ,அது தரும் ஒப்பந்த கமிஷன்
எல்லாம் சேர்ந்து ஆட்சேபணைக் குரல்களை ஒடுக்கி வருகிறது.

நீதிமன்றம் வேறு மக்களின் கருத்துக் கேட்பு அவசியமில்லை
என்ற சட்ட பிரிவு செல்லும்
என்று தீர்ப்பு கூறியதால் தெம்பு வந்து விட்டதால்
அடக்குமுறையை கையில் எடுக்க தயங்க வில்லை எடப்பாடி
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப் பட்ட பிறகு
ஜெய் கிசான் அந்தோலன் என்று விவசாயிகள் உரிமை பாதுகாப்பு
அமைப்பை நடத்தி வருகிறார் யோகேந்திர யாதவ்
அவர் திருவண்ணாமலை வந்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி
விவசாயிகளை சந்திக்க முயன்றிருக்கிறார்.

அவரை கைது செய்து செங்கம் காவல் நிலையத்தில்
வைத்திருக்கிறார்கள். கைபேசியை பிடுங்கி வைத்திருக்கிறார்கள்.
தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
யோகேந்திர யாதவ் கூறியது அதிர்ச்சி யளிக்கிறது.
வடமாநில விவசாயிகள் கவனத்திற்கு இங்கே நடக்கும்
விவசாயிகள் மீதான அடக்குமுறை சென்று விடக் கூடாது
என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழ் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்ட நடவடிக்கை இது
அதேபோல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை
பார்வையிடச் சென்ற விவசாயிகள் சங்க பி ஆர் பாண்டியனையும்
தினகரன் கட்சிக்காரர் களையும் கூட அரசு கைது செய்திருக்கிறது.
இந்த அடக்குமுறை எதற்கு ? என்ன சாதிக்கப் போகிறார்கள்?
மக்களிடம் மதிப்பிழந்து வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு
இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதை யையும்
அழித்துக் கொள்ள வேண்டாமே?

This website uses cookies.