தமிழக அரசியல்

பெரியார் -கலைஞர் கனவு நனவானது; முதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்?

Share

அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என பெரியார்  1969  ல் தொடங்கிய போராட்டம்

கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு  அவரால் 1970 ம் கொண்டு வரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு

மீண்டும்  அவரால்  2006 ல் சட்டம்  கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் எல்லாரையும் நியமிக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ,

கலைஞர் ஆட்சியில் அர்ச்சகர்  பயிற்சி  பெற்ற 206  பேரில் ஒருவருக்கு

2018ல் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவில் அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாத ஒரு மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டு

ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது.

அ தி மு க அரசுக்கு இந்த அளவாவது கொள்கை பிடிப்பு இருப்பது வரவேற்கத்தக்கது.

ஏன் இன்னும் மிச்சம் உள்ள 205  பேருக்கு வேலை வழங்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கேரளாவில் பணி காலியாக இருந்த இடங்களில்  ஐம்பது சதம்  இடங்களுக்கு பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகர் களாக நியமித்து இடது சாரி அரசு சாதனை புரிந்துள்ளது.

மதுரையில் நியமிக்கப்பட்ட அந்த அர்ச்சகர்    யார் அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அரசு சொல்லவில்லை.

அதனால் பிரச்னை வரலாம் என்ற பயமாம்.

இவர்கள் எப்படி இந்த முற்போக்கான நடவடிக்கையை தொடர்வார்கள்?

யாரோ பக்தர் போர்வையில் சிலர்  செயற்கையாக ஆட்சேபிக்க இந்த திட்டத்தையே முடக்க சதியா என்ற சந்தேகமும் எழுகிறது.?

இல்லையேல் கேரளாவைப்போல் பணி காலியாக உள்ள இடங்களில் எல்லாம் பயிற்சி பெற்றவர்களை நியமித்து இருக்கலாமே?

ஏன் இந்த ஒற்றை நியமனம்?

எல்லா பெரிய கோவில்களிலும் அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக பணி நியமனம் பெற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பக்தர் பேரவைகள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

This website uses cookies.