தமிழக அரசியல்

அன்புமணி ராமதாசின் பல்டி; ஏதாவது ஒரு அணியில் சேருவோம்??!!

Share

இரண்டு திராவிட கட்சிகளோடும் இனி இந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று மருத்துவர் ராமதாஸ் கூறி வந்தார்.

அதையே அன்புமணியும் வழிமொழிந்து கூறிவந்தார்.

எல்லா துன்பங்களுக்கும் இரண்டு திராவிட கட்சிகளே காரணம் என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

கடந்த காலத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் பதவிகளை அடைந்தார்கள் பா ம க வினர். தனித்து நின்று எந்த வெற்றியையும் பெற அவர்களால் முடியவில்லை.

இந்த உண்மை இப்போதுதான் அவர்களுக்கு உறைத்து இருக்கிறது.

‘ அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று மற்ற கட்சிகள் நினைக்கலாம். நாங்கள் தமிழ் நாட்டின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் பணி. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள்  ஏதாவது ஒரு அணியில்  இருப்போம். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி அமையும் என்பது பாராளுமன்ற தேர்தலின் போதோ அல்லது அதனுடன் இணைந்த சட்ட மன்ற தேர்தலின் போதோ தெரியும். தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப் படும் ‘ என்று அன்புமணி ராமதாஸ் ஓர் ஆங்கில பத்திரிகையின் சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்பொது மருத்துவர் ராமதாஸ் அன்புமணியின் கருத்தை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.

தினகரனுடன் பாஜக-வுடனும் கூட்டணி பற்றி பாமக பேசி வருவதாக முன்பே செய்திகள் கசிந்தன.

இன்று வரை திமுக அல்லது அதிமுக என்பதுதான் பொது மக்கள் கருத்தாக இருந்திருக்கிறது. அதை மாற்ற முடியாது.

கருத்துக் கணிப்புகளிலும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில்  இருக்கிறார்.

தனித்து நின்று எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்பது அன்புமணியின் கருத்து. இதுதான் பல்லாண்டுகளாக நிலவி வரும் பொதுக் கருத்தாயிற்றே.

பிடிவாதமாக தனிக்கச்சேரி தான் நடத்துவோம் என்று நிற்காமல் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்கத் தொடங்கியது நல்லதே.

வெற்றியைத் தராமல் இனி கட்சி நடத்த முடியாது என்பதை இரண்டு மருத்துவர்களும் புரிந்து கொண்டால் சரி.

This website uses cookies.