தமிழக அரசியல்

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது!! காவல்துறை என்ன செய்யப்போகிறது?

Share

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது, காவல்துறை என்ன  செய்யப்போகிறது ? பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா காவல்துறையை மிக கேவலமாக திட்டி பேசிய பிறகும் கூட நடவடிக்கை ஏதும் இல்லாமல் பொதுக் கூட்டங்கள் பேசி வருகிறார். அதன் விளைவு தொடங்கிவிட்டது. ஏனென்றால் அவர்தான் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியவர். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது.

ஒரத்தநாடு காவராப்பட்டு  கிராமத்தில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலையின் 5 அடி உயர கைத்தடி சிலையிலிருந்து  உடைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் தஞ்சாவூரிலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருகிறது. வழக்கம்போல காவல்துறை தேடி வருகிறது.

பெரியாரியத்தை தமிழக மண்ணில் இருந்து அகற்றாத வரை தாங்கள் இங்கே காலூன்ற முடியாது என்ற நிலையில் இருப்போர் யாரோ அவரே இந்த கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டிருக்க முடியும். இதனால் எல்லாம் பெரியார் செல்வாக்கு கூடுமே தவிர குறையாது ஆனால் எதிரிகளை அடையாளம் காண இந்த சம்பவங்கள் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

என்ன செய்வது? மத்தியில் ஆட்சி செய்வோருக்கு அடங்கி நடப்போர், இங்கே  ஆட்சியில் இருக்கிறார்களே?

This website uses cookies.