தமிழக அரசியல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய அரசு ஆடும் நாடகம் ??!!

Share

ஸ்டெர்லைட் ஆலை மூடியாகிவிட்டது.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது. 13 பேர் சுட்டுக் கொலை செய்யப் பட்ட வழக்கும்
சி பி ஐ விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.
இந்தநிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர்
அறிக்கை வெளியிடுகிறார்.

மத்திய அரசின் அமைச்சகம் உத்தரவின் பேரில்
மத்திய நிலத்தடி நீர் வாரியம்
தூத்துக்குடியில் நிலத்தடி மாசு குறித்து
தன்னிச்சையாக ஒரு ஆய்வு நடத்தி அதன்
அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது என்றும்
இது பற்றி தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது என்றும்
தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுக்கு
ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் என்று கூற முடியாது
என்ற அறிக்கை ஆலைக்கு ஆதரவாக உள்ளது என்றும்
அதை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

நம்பும்படியாகவா இருக்கிறது?
உண்மையாக இருந்தால் யார் நாடகம் நடத்துவது?
உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ஏன் இத்தகைய
ஆய்வு நடத்த வேண்டும்? யார் சொல்லி இந்த ஆய்வு நடந்தது?
ஆலை நிர்வாகம் சொல்லி நடந்ததா? இல்லையா?
இல்லையென்றால் தானாக இந்த் ஆய்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
இந்த வேதாந்த குழுமத்துக்கு தான் மத்திய அரசு
டெல்டா மாவட்டங்களில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு
அனுமதி அளித்திருப்பது குறிப்பி டத்தக்கது.

தவறுக்கு மேல் தவறாக மோடியின் மத்திய அரசு
தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
அதற்கு ஆதரவாக எடப்பாடியும் ஓ பி எஸ் உம்இருப்பார்கள்
என்று பா ஜ க எதிர்பார்ப்பதில் பொருள் இருக்கிறது.
நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு ஆதரவாக ஆவணங்களை
உருவாக்கும் மோடி அரசின் இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

This website uses cookies.