Connect with us

தலைமை தகவல் ஆணையரை அடக்க சட்ட திருத்தம் கொண்டுவந்த மோடி அரசு.!

modi

சட்டம்

தலைமை தகவல் ஆணையரை அடக்க சட்ட திருத்தம் கொண்டுவந்த மோடி அரசு.!

மோடி அரசு வந்ததில் இருந்து ஜனநாயக அமைப்புகளை சிதைக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

அதில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

பாராளுமன்ற கமிட்டிகள் எதற்கும் பரிசீலனைக்கு அனுப்பாத மத்திய அரசு  மக்களவையில் சட்டத்தை நிறைவேற்றி விட்டு மேலவையில் நிறைவேற்ற காத்திருக்கிறது.

சுயாதிகரம் பெற்ற அமைப்பாக இருந்தால்தான் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படும்.

எல்லா அரசு நிறுவனங்களும் தங்கள் அமைப்பைப் பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட சட்டம் உத்தரவிடுகிறது.

இருப்பினும் மக்கள் மனுப் போட்டுதான் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடிகிறது.

இப்போது காலியாக வைத்திருக்கும் ஆணையர்களை நியமிக்க அரசு ஆர்வம காட்ட வில்லை.

ஆணையர்களின் பொறுப்பு முன்பு ஐந்தாண்டுகளாக இருந்ததை இப்போது ஏன் மாற்ற வேண்டும்.

சம்பளம் போன்றவற்றை ஏன் மாறுதலுக்கு உள்ளாக்க வேண்டும்?

ஆணையர்களை பணி பாதிகாப்பு என்ற அச்சத்தில் வைத்திருக்க மத்திய அரசு விரும்புகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் இல்லை.

அன்னா ஹசாரே இதை கண்டித்திருக்கிறார். சோனியா காந்தி கண்டித்திருக்கிறார்.  திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் எல்லாமே கண்டித்திருக்கின்றன.

திமுகவின் ஆ ராசா இதை கருப்பு நாள் என வர்ணித்திருக்கிறார்.

பாராளுமன்ற மேலவையில் ஏதாவது திருத்தம் செய்ய மத்திய அரசு ஒப்புக்கொள்ளுமா என்பது மட்டுமே இப்போதிருக்கும் ஒரே நம்பிக்கை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top