தமிழக அரசியல்

வந்த தண்ணீர் சென்றது கடலுக்குள்? வெட்கப்படாத ஆட்சியாளர்கள்??!!

Share

காவிரி நீருக்கு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது சாதனை என்றால் வந்த தண்ணீரை பயன் படுத்த வழி இல்லாமல் கடலுக்குள் விட்டதை என்ன சொல்லி அழைப்பது?

அன்றே சொன்னார் குமாரசாமி – உங்களுக்கு தண்ணீர் கொடுத்து

என்ன செய்யப் போகிறீர்கள் ? கடலுக்குள் விடப் போகிறீர்கள் என்றாரே?!

உண்மையாகிவிட்டதே!

ஆண்டுதோறும் செய்ய வேண்டிய குடி மராமத்து பணிகள் தொடர்ந்து

நடந்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா?

இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது. –

கடை மடைக்கு தண்ணீர் போய் சேரவில்லை !

என்ன கொடுமை இது – யார் காரணம் ?

சமவெளியில் தடுப்பணை எப்படி கட்டுவது என்று கேட்கும்

ஒருவர் தமிழக முதல்வர் ? ! முக்கொம்பும்  அணைக்கரையும் ஏன்

கல்லணையும் சமவெளியில் தானே இருக்கின்றன என்பதை

யாராவது அவருக்கு சொல்லி இருக்கக் கூடாதா?

பின் எப்படி 292  கோடி செலவில்   62  தடுப்பணைகள் கட்டுவோம்

என்று அறிவிக்கிறார்?    இந்த அறிவு முன்பு இல்லாமல் போனது ஏன்?

2014   ம் ஆண்டே ஜெயலலிதா பிரிவு   110  ன் கீழ் சட்ட மன்றத்தில்

அறிவித்ததாம் இந்த திட்டம்.   என்ன செய்தீர்கள் எத்தனை ஆண்டுகளாய்?

மணல் கொள்ளையை தடுக்க எத்தனை உத்தரவுகளை நீதிமன்றங்கள்

இட்டிருக்கின்றன . அவற்றின் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

கட்சிக்காரர்கள் அடிக்கும் கொள்ளையை தடுக்க முடியாத ஒரு அரசு

இருந்தால் என்ன வீழ்ந்தால் என்ன.

முக்கொம்பில் உடைந்த மதகுகள் மீண்டும் உயிர் பெற எத்தனை

ஆண்டுகள் ஆகுமோ? ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்ட  திட்டங்கள் நடை முறைப் படுத்தப் பட்டிருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது .

எந்த திட்டமும் இங்கே முறையாக நடைமுறைக்கு வருவதில்லை.

நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் எல்லாவற்றையும்

இல்லாமல் ஆக்கி விடுகிறது.    இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு

கர்நாடக அரசை குற்றம் சொல்வீர்கள் ?

கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் இங்கிருந்து

ஆற்று மணல் செல்வது அவமானமாக உங்களுக்கு படவில்லையா?

இயற்கை அள்ளிக் கொடுக்கிறது.  சிந்திக்காதவர்கள் , ஊழல் பெருச்சாளிகள்

கையில் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டு எல்லாவற்றையும்

வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள்-அதிகாரிகள் ஊழல் கூட்டணி முறிக்கப் பட்டால்தான்

இனி எந்த முன்னேற்றமும் இங்கே சாத்தியம். !

This website uses cookies.