Connect with us

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வெற்றி யாருக்கு?

politics

தமிழக அரசியல்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைதேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றாலும் அரசியல் காட்சிகள் நிச்சயம் மாறும்.

இனி அதிமுகவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறதா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இவை அமையும்.

முன்பு நடந்த இடைதேர்தல் களில் திமுக அதிமுகவிடம் இருந்து 12 இடங்களை கைப்பற்றியது.

பின்பு நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெறி பெற்றது. அதே வெற்றி தொடருமா என்பது கேள்விக்குறி?

ஆளும் கட்சியின் பண பலத்தை சாதாரணமாக ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

பாஜகவின் அதிரடி மொழி வெறி இந்தி திணிப்பு நடவடிக்கைகளால் தமிழக மக்கள் மத்திய மோடி ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அதற்கு ஆலவட்டம் போடுகிற எடப்பாடி ஆட்சியின் மீதும் அந்தக் கோபம நிச்சயம் திரும்பும்.

இதுவரை மத்திய  அரசை கண்டித்து எடப்பாடி அரசு எதுவுமே சொன்னதில்லை. மாறாக ராஜேந்திர பாலாஜி மோடி போற்றத் தகுந்த தலைவர் என்று மோடியை  பாராட்டிக் கொண்டே இருக்கிறார்.

மோடி அரசின் மீதான கோபம் அதிமுக அரசின் மீதுதான் திரும்பும். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அனுதினமும் மத்திய அரசை குறை சொல்லி அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே பாமக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில்தான் இருப்பார்கள். அவர்கள் எப்படி அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள்? ஏனென்றால் பாமக விக்கிரவாண்டி தொகுதியில் ஏறத்தாழ நாற்பதாயிரம் வாக்குகள் வாங்கி இருக்கிறது. அது அதிமுகவுக்கு  போனால் நிச்சயம் அதிமுக வெல்ல வேண்டும். ஆனால் அதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பார்கள். ஏனென்றால் பணபலம். அதிகார பலம். ஆனால் இப்போது மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

எனவே எல்லா கணக்குகளையும் மீறி ஆளும்கட்சி தோல்வியை சந்திக்கும் வாய்ப்புகள்தான் அதிகம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top