Connect with us

கேட்டது வேலை! கொடுத்தது பிள்ளை? அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டில் உண்மை வெளி வர வேண்டும்!

minister-jayakumar

தமிழக அரசியல்

கேட்டது வேலை! கொடுத்தது பிள்ளை? அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டில் உண்மை வெளி வர வேண்டும்!

சில நாட்களாக ஒரு ஒலி நாடா பரபரப்பாக ஊடகங்களில் சுற்றி வந்தது.

அதில் ஒரு பெண் ஒரு  ஆணுடன் பேசுகிறார்.   தன் மகள் கருவுற்றிப்பதாகவும் அதை கலைக்க  முடியவில்லை என்றும் உதவி செய்யும் படியும் அந்த பெண் பேச ஆண் குரல் அந்தப் பெண்ணை வீட்டுக்கு  வரும்படியும் தேவையானதை செய்வதாகவும் கூறுகிறது.   அதில் வரும் சில வசனங்கள் அவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்றும் அந்தப்  பெண்ணுக்கு  ஆண் சில சமயங்களில் பண உதவி செய்ததாகவும் வீட்டில் உள்ளவர்கள் சிபாரிசுக்கு போனவருக்கு பிள்ளை  கொடுத்து அனுப்பி  விட்டாரே என்று திட்டுவதாகவும் சொல்கிறார்.

பாதுகாப்பு கருதி பெண்ணின் பெயர் தவிர்க்கப் பட்டுள்ளது.

அந்த ஒலிநாடாவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமார் குரலை ஒத்திருந்ததால் பரபரப்பு பற்றிக்கொண்டது.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்தக் குரல் தன்னுடையது அல்ல . சசிகலா தினகரன் குடும்பத்தை தீவிரமாக எதிர்ப்பதால் இப்படியெல்லாம் போலியாக ஆடியோ தயார் செய்து  தன்னை இழிவு படுத்துவதாகவும் தான் குரல் பரிசோதனைக்கு  தயாராக இருப்பதாகவும் இது போன்ற புகார்களை தான்  1982  லிருந்தே எதிகொண்டு வருவதாகவும் இதையும் சந்திக்க வழக்கு தொடர இருப்பதாகவும் இருக்கிறது அவரின் விளக்கம்.

minister-jayakumar

minister-jayakumar

அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் தந்தை பெயர் ஜெயக்குமார் என்று இருப்பதால் அது தான் இல்லை என்றும் இந்த பெயரில் பலர் இருக்கிறார்கள் என்றும் போகிறது  அவரது விளக்கம்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் சார்பில் மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆக விவகாரம் அடங்குவதாக  இல்லை.

பொதுமக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.  ஒரு அமைச்சரின் பேரில்  பாலியல் புகார் கூறப்படுகிறது.   அவர் மறுக்கிறார். ஆடியோ போலி என்கிறார்.  புகார் உண்மை என்றால் அமைச்சர் பதவில்  அவர் நீடிக்க முடியாது.    பொய் புகார் என்றால் ஆடியோ தயாரித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய  வேண்டும். இல்லை என்றால் நாளை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பழி வாங்க ஒரு போலி  ஆடியோவை வெளியிட்டு ஊடக மூலமாக  பெயரைக் கெடுத்து தண்டித்து விட்டு  நாளை அப்படியே மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டு  விடலாம்.

அரசியல் இன்னும் கெட என்ன இருக்கிறது?

எனவே காவல்துறை இதை விசாரித்து உண்மை கண்டறிய  வேண்டும் என்பதே பொது மக்களின்  எதிர்பார்ப்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top