Connect with us

காஷ்மீரை பிரித்து பந்தாடிய அமித் ஷா ?! அவசர நிலை அடுத்து வருமா?

amith-sha-kashmir

இந்திய அரசியல்

காஷ்மீரை பிரித்து பந்தாடிய அமித் ஷா ?! அவசர நிலை அடுத்து வருமா?

ஒருவழியாக தனது அறுபது ஆண்டு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது பாஜக.

அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 35A & 370 இரண்டையும் அகற்றிவிட்டு காஷ்மீரை இரண்டாக பிரித்து அவற்றையும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததன் மூலம் மொத்த மாநிலத்தையும் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்து விட்டது பாஜக.

அதுவும் ஜம்மு காஷ்மீர் சட்ட மன்றம் உள்ளதாகவும் லடாக் சட்டமன்றம் இல்லாததாகவும் இயங்கும்.

நாடு முழுதும் மாநில சுயாட்சி கோரிக்கை கள் வலுவாகி வரும் நிலையில் இந்து மத ஒற்றுமை என்ற பிம்பத்தில் தனது மாநில உரிமை ஒழிப்பு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது பாஜக. 

மெகபூபா, உமர் அப்துல்லா இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பரூக் அப்துல்லா எங்கே என்று தெரியவில்லை.

இந்து வெறியை பலப்படுத்த இந்த நடவடிக்கை பாஜகவுக்கு  உதவியிருக்கிறது.

பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தெலுகுதேசம், டிஆர்எஸ். ஒய்எஸ்ஆர் கட்சி, பிஜேடி அதிமுக போன்ற கட்சிகள் ஆதரவளித்திருக்கின்றன .

இந்த நடவடிக்கை மேலும் இந்து வாக்கு வங்கியை பாஜக வலுப்படுத்திக் கொள்ள உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் நாட்டுக்கு நல்லதா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும்.

அறிவிக்கப்படாத அவசர நிலை என்று டிஆர்பாலு பேசியிருக்கிறார்.

அவசர நிலையை அறிவிக்காமலேயே தனது திட்டங்களை அமைக்க அதிகாரங்களை வைத்துக் கொண்டே சாதிக்கும் வழிகளைத் தான் பாஜக செயல்படுத்தும்.

மதசார்பற்ற சக்திகள் வலுவிழந்து வருவதைப்போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

எல்லாவற்றையும் விட இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற ஆய்வுக்கு நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இந்த பிரச்னை வேறு வடிவங்களை எடுத்திருக்கும். அப்போது தீர்ப்பு பயனில்லாமல் போகலாம்.

அடுத்து பாஜக என்ன செய்யும் என்பதே பொதுமக்களின் கவலை.?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top