Connect with us

நிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே? 0.05% ஒதுக்கிய மோடி எங்கே?

modi-trump

உலக அரசியல்

நிவாரணத்திற்கு ஜீடிபியில் 15% ஒதுக்கிய டிரம்ப் எங்கே? 0.05% ஒதுக்கிய மோடி எங்கே?

அமெரிக்கா வலுவுள்ள நாடாக இருக்கட்டும்.  நமது  பொருளாதார நிலை ஒப்பீட்டளவில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் மொத்த  உள்நாட்டு உற்பத்தி  மதிப்பில் கொரொனா நிவாரணத்துக்காக 15% நிதியை ஒதுக்கி உள்ளார். அதாவது  74  லட்சம் கோடி ரூபாய்.

ஒவ்வொரு  அமெரிக்கனுக்கும் நிவாரண துகை நேரடியாக அரசிடம் இருந்து போகும். ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் நமது  மோடி கொரொனா நிவாரணத்துக்காக  ஒதுக்கிய துகை நமது உள் நாட்டு  உற்பத்தி மதிப்பில் 0.05% தான்.

நமது ப சிதம்பரம் புள்ளி விபரம் கொடுத்தார். அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் எல்லா இந்தியருக்கும் ஐந்தாயிரம் கொடுத்தால் கூட அறுபதாயிரம் கோடி ரூபாய் தான் செலவாகும். அதையாவது கொடுங்கள் என்றார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மத்திய அரசு கொடுக்கும் அனைத்து நிவாரணமும் நேரடியாக நிறுவனங்களுக்கும்  மறைமுகமாக மக்களுக்கும் சென்றடையும்  விதத்தில் தான் இருக்கிறது. அதை நேரடியாக கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்கள்.

இதுவரை கொரொனாவை வைத்து மத்திய அரசை யாரும் விமர்சிக்க வில்லை. ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமிது.அரசும் விமர்சனங்களுக்கு  இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கீழே இறங்கிய  மோடியின் மதிப்பு கொரொனாவில்  மேலும் இறங்கிக் கொண்டிருக்கிறது .

அதை தவிர்க்கும்   நோக்கத்தில்தான் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை ஆலோசனை கேட்கிறார்.

ஆனால் நடவடிக்கையில் அது பிரதிபலிக்க வேண்டுமே? பிரதிபலித்தால் மதிப்பு  உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்வாரா மோடி?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in உலக அரசியல்

To Top