Connect with us

இவ்வளவு செய்தும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே?!

election-Jammu-Kashmir

இந்திய அரசியல்

இவ்வளவு செய்தும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே?!

காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருமாற்றி சாதித்து விட்டோம் என்று பாஜக அரசு மார் தட்டிக் கொண்டிருக்கிறது.

இனி யார் வந்தாலும் சுலபமாக பிரிவு 370ஐ மீண்டும் காஷ்மீர் பகுதிக்கு கொண்டு  வர முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது பாஜக.

இன்னும் ராணுவம் சூழ்ந்திருக்கும் நிலையில் தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் வாழ்கிறார்கள்.

ராணுவத்தை முற்றாக அகற்றி அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் இந்திய தேசிய கட்சிகள் மக்கள் நம்பிக்கையை பெற முடிந்தால் அதுதான் உண்மையான ஜனநாயகம்.

சமீபத்தில் நடந்து உள்ளாட்சி தேர்தல்களில் உமர் அப்துல்லா மெகபூபா, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பாஜகவும் சுயேட்சைகளும்  தான் முக்கிய போட்டியாளர்கள்.

நியாயமாக பார்த்தால் பாஜக அனைத்து இடங்களையும் வென்றிருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? 307 வட்டங்களில் 217 இடங்களில் வென்றது சுயேட்சைகள்.    மக்கள் 96% முதல் 99% வரை தேர்தலில் கலந்து கொண்டதுதான் சாதனை.

இந்துக்கள் பெருவாரியான ஜம்மு பகுதியில் கூட 148  வட்டங்களில் 88 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்று பாஜக வென்றது 52 இடங்களில்தான்.

என்ன செய்து என்ன லாபம் என்ற நிலையில்தான் காஷ்மீரில் பாஜக நிலைமை  இருக்கிறது.

காஷ்மீர் மக்கள் பெருவாரியாக தேர்தலில் கலந்து கொண்டதை பாராட்டி பிரதமர் மோடி டிவீட் செய்து இருப்பது எதை காட்டுகிறது?

மீசையில் மண் ஒட்டவில்லை என்பதையா?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top