Connect with us

‘தமிழர்கள் கோழைகள்’ கிரண் பேடி தாக்குதலின் பின்னனி?!

kiran-bedi

இந்திய அரசியல்

‘தமிழர்கள் கோழைகள்’ கிரண் பேடி தாக்குதலின் பின்னனி?!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒரு பாஜக காரர்.

தமிழகத்தில் ஒரு இடம் தவிர அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியதை அவரால் சீரணித்துகொள்ள முடியவில்லை போலும்.

அதனால்தான் பொங்கி இருக்கிறார். தமிழத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து அவருக்கு அக்கறை இருந்தால் அதை அவர் வேறு விதமாக காட்டியிருக்கலாம் .

பிரச்னைக்கு என்ன காரணம் என்று கருத்துக் கூறும்போது ‘மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அக்கறையில்லாத அதிகார வர்க்கம், அத்துடன் மிக அதிகமாக சுயநலம் மற்றும் கோழைத்தனமான மனோபாவம் கொண்ட பொதுமக்கள்

ஆகியோர்தான் காரணம்” என்று பதில் அளித்துள்ளார்.

இவ்வளவு மோசமாக தமிழக மக்களை விமர்சிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

பாஜக ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?

அதிமுக அரசு மீது மத்திய அரசுக்கு கோபம் இருக்கலாம். அதை பேடி வெளிப்படுதுகிறாரா?

வந்த நாள் முதல் இந்த நாள் வரை கிரண்பேடி பிரச்னைக்கு உரியவராகவே இருக்கிறார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் தலையிடுவது போன்ற மோசமான  முன் உதாரணங்களால் பேடி அடையாளம் காட்டப் படுகிறார்.

இப்போது  உச்சநீதி மன்றத்தின் பரிசீலனையில்  இருக்கிறது அவரது தலையீடு  பற்றிய பிரச்னை.

விளம்பரம் இல்லாமல் ஒரு நாள் கூட பேடியால் காலம் தள்ள முடியாது என்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் பேசாமல் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு ஆகி  விட்டது.

பா  ஜ க கட்சிக்காரர்களை நியமன சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆக்கியதால் எந்த விளைவையும்  அவர்களார் ஏற்படுத்த முடியவில்லை.

இத்தகைய  அத்துமீறல் களால் தான் புதுவை மக்கள் வெறுப்புற்று பா ஜ க வுக்கு எதிராக வாக்களித்தார்கள்.    இன்னும் திருந்தாமல் தமிழ்நாட்டு மக்களை கோழைத்தனமானவர்கள் என்றுப் ஏசும் அளவுக்கு சென்றுவிட்டார்.

”  மோடி டேக் பேக் பேடி ”   என்பதுதான் இன்றைய குரல். !!

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top