Connect with us

ரகசிய பெட்டகத்தை திறக்க மன்னர் குடும்பம் ஏன் எதிர்க்க வேண்டும்?

Latest News

ரகசிய பெட்டகத்தை திறக்க மன்னர் குடும்பம் ஏன் எதிர்க்க வேண்டும்?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்தான் இந்தியாவில்  அதிக சொத்துக்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி.      பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள் இந்த கோவிலுக்கு உண்டு.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கோடி வருவாய் உள்ள திருப்பதி  தேவஸ்தானத்தை விட சொத்துக்கள் அதிகம் உள்ள கோவில் இதுதான்.

அதிலும் முதல் பெட்டகத்தில் மட்டும்  1.25 லட்சம் கோடி மதிப்பிலான தங்க விக்ரகங்கள் நவரத்தினங்கள் ஆபரணங்கள் தங்கப் பாளங்கள் கண்டு எடுக்கப் பட்டன.

இரண்டாவது  பெட்டகம் இன்னும் திறக்கப் பட வில்லை.

மற்ற  பெட்டகங்களில் சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய அணிகலன்கள் இருக்கின்றன .

அந்த இரண்டாவது பெட்டகத்தை திறக்க மன்னர் குடும்பம்  எதிர்க்கிறது.    ஏன் என்பது புதிராக் இருக்கிறது.

கதவுகளை உடைத்தால் கோவில் கட்டுமானம் சிதைந்து விடும். அபூர்வ நாகம் காவல் காத்து நிற்கிறது. அசம்பாவிதங்கள் நிகழும். முன்பே முயன்றபோது அலுவலர் ஒருவரின் கால் பாதிப்புக்கு உள்ளானது.  என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

ஆனால் தணிக்கைத் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த பெட்டகம் வெவ்வேறு தருணங்களில் ஏழு முறை திறக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்.

சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய அணிகலன்களில் ஏழு நகைகளை காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்னாள் ஒரு புகார் கிளம்பியது.

உச்ச நீதி மன்றத்தில் இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள் பக்தர்கள்.    லட்சக் கணக்கான கோடிகள் மதிப்புள்ள நகைகளை யாருக்கும் மதிப்பை அறிவிக்காமல் ரகசியமாக பாது காப்பதால் யாருக்கு என்ன பயன்.?   அது பிற்காலத்தில் தவறாக பயன் படுத்தப் படும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தும்  மன்னர் குடும்பம் ரகசியம் காக்க விரும்புகிறது என்றால் அது யாரோ பின்னால் இருந்து இயக்கு கிறார்கள் என்றுதான் பொருள்.

இத்தனை நாள் பாதுகாத்து வந்தார்களே என்றால் அதனால் யாருக்கு என்ன பயன்?

சொத்துக்களை என்ன செய்வது என்பது வேறு.    சொத்துக்களை வெளிப்படையாக பராமரிப்பது என்பது வேறு.

ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் வேண்டும்.

ஆன்மிகத்தை வளர்க்க வந்தவர்கள் எப்படியெல்லாம் சொத்துக்களை குவித்து வைத்தார்கள் என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்புதான் வெளிச்சம் தர வேண்டும்.

?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top