Connect with us

திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்? பாஜக அரசின் பிடியில் இருக்கிறதா தேர்தல் கமிஷன்?

thiruvarur-election

தமிழக அரசியல்

திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்? பாஜக அரசின் பிடியில் இருக்கிறதா தேர்தல் கமிஷன்?

ஜனவரி மாதம் 28 ம் தேதி இடைதேர்தல் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் இந்த அறிவிப்பில் மறைந்து கிடக்கும் அரசியல் இந்த தேர்தல் கமிஷன் சுயமாக செயல்  படுகிறதா என்ற ஐயத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.

திருபரங்குன்றம் தொகுதிக்கு  வழக்கு நிலுவையில் இருக்கிறது  என்று காரணம் சொன்னாலும்  17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருக்க என்ன காரணம் சொல்லும் தேர்தல்  கமிஷன்.?  மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவித்த பின் ஏன் இந்த பாரபட்ச முடிவு?

ஏன் திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவிக்க வேண்டும்?

அங்கு திமுக-வை தோற்கடித்து கலைஞர் பெற்ற மகத்தான வெற்றியை தற்போதைய தலைவர் ஸ்டாலினால் பெற முடியவில்லை என்று கறை பூசி திமுக காங்கிரஸ் கூட்டணியை பலவீனப் படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது பாஜக அரசு.

முடிந்தால் பலவீனப்படுத்துவது. முடியாவிட்டால் அது அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிதானே என்ற சமாதானம்.

திமுக வை தோற்கடிக்க முடியுமா முடியாதா என்பது வேறு. செல்வாக்கு உள்ள  கம்யுநிச்டுகளை எதிர்த்து நின்று கலைஞர் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இப்போது கம்யுனிச்டுகளும் திமுக அணியில். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வெற்றி  கல்லில் எழுதப் பட்ட ஒன்று என்று பேட்டி கொடுக்கிறார்.

               திருவாரூருக்கு தேர்தலை அறிவித்தது முக்கியம் அல்ல.   மற்ற 17  தொகுதிகளுக்கும் அறிவிக்காததுதான் பிரச்னை. நடத்தினால் தினகரனின் பலமும் வெளிப்பட்டிருக்கும். அது அவர் அணியை இணைப்பதில் தடையை  ஏற்படுத்தும்.

செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியபின் தினகரன் அணியில் இருந்து மேலும் பலர் தாவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஏன் தேர்தல் கமிஷன் தேர்தலை தவர்க்க வேண்டும்? அதுவும் தினகரன் தாங்கள் உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்ட பின் தேர்தல் கமிஷன் ஏன் தேர்தலை நடத்துவதை தள்ளிப் போட வேண்டும்?

எடப்பாடி அரசை காப்பாற்று வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.      நடத்தினால் ஒன்று எடப்பாடி அரசு கவிழும் அல்லது திமுக அரசு உருவாகும்.

இரண்டையும் தவிர்க்க அதிகார வர்க்கம் எடுத்த முடிவுதான் திருவாரூருக்கு மட்டும்  இடைதேர்தல் .

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை ஆட்டங்களை ஆட இருக்கிறதோ பாஜக அரசு?

இது ஒரு அரசியல் கள்ளாட்டம்?!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top