Latest News

தமிழக மீனவர் இந்தியர் இல்லை என்கிறதா இந்திய அரசு?

Share

தமிழக மீனவர்களின் படகுகள் 119 ஐ  பறிமுதல் செய்து வைத்திருப்பதை அரசுடமை ஆக்கப் போவதாக  இலங்கை அமைச்சர் மஹிந்த சமர வீரா அறிவித்திருப்பது  மிகவும் கண்டனத்துக்கு உரியது .

தன் நாட்டு மீனவர்களை இலங்கை அரசு துன்புறுத்துவதை இந்திய அரசு பெரிதாக எடுத்துக் கொண்டதே  இல்லை.        பிரச்னை பெரிதானதால்     தலையிட்டு  இப்போதெல்லாம் சுட்டுக் கொல்லாமல் இருப்பதே தனது சாதனை என்று இந்திய அரசு கருதுகிறது.

ஆனால் படகுகளை பிடித்து வைத்து கொள்ளுங்கள் என்று சுப்ரமணியன் சாமி சொன்னார்.   அது அரசின் கருத்தல்ல என்று இந்திய அரசு மறுக்க வில்லை.

இந்திய மீனவர்கள் மீன்  பிடிப்பு தொழிலை கைவிட வேண்டும் என்றே இந்திய  அரசு விரும்புகிறது .

தனது மீனவர் எல்லை தாண்டக் கூடாது என்று சொல்கிற அரசு எப்படி எல்லையை கச்சதீவில்  தாரை வார்த்தது.?

அந்தக் கேள்விக்கு பதில் தராமல் இந்தப் பிரச்னைக்கு எப்படி விடை கிடைக்கும்.?

இந்திய மீனவர் படகுகளை இந்திய அரசு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்திய அரசும் உடந்தை என்றே பொருள்.

வரலாற்றில் இடம் பேரும் இந்த வஞ்சக செயலுக்கு விலை கொடுத்தே தீர வேண்டும்.

This website uses cookies.