Connect with us

மோடி, எடப்பாடி, ரஜினி கூட்டணி வெற்றி பெறுமா??!!

rajini-modi-ops

தமிழக அரசியல்

மோடி, எடப்பாடி, ரஜினி கூட்டணி வெற்றி பெறுமா??!!

வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீடு சென்னையில் நடந்தது. அதில் அடுத்த தமிழக தேர்தலை மனதில் கொண்டு பேச்சாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பாஜக பிடியில் எடப்பாடியும் ஒபிஎஸ்சும் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அது மட்டுமே தேர்தலில் வெற்றி பெற உதவாது என்பதும் தெரியும்.

எனவேதான் ரஜினியை சேர்க்கப் பார்க்கிறார்கள்.

எப்போதுமே வலதுசாரி சிந்தனை உடைய ரஜினி இதுவரை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்.

2021 சட்ட மன்ற தேர்தலில் வந்தே விடுவார் என்று மணியன், கராத்தே தியாகராஜன் , போன்றோர் காத்திருக்கிறார்கள். அவர் மாட்டவே போவதில்லை.

சிலருக்கு வந்து அவர் மூக்கறு பட வேண்டும் என்ற ஆசை.

குருமூர்த்தியும், கஸ்தூரிரங்கனும் எம் எஸ் சாமிநாதனும் மேடையில் இருந்து இந்தக் கூட்டணி யார் சார்பானது என்று அறிவித்தனர்.

ரஜினி பாதி பார்ப்பனர் என்பது அவர்கள் எண்ணம்.

அதிமுக முழுதும் ரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?

வேலூரில் ஏ சி சண்முகம் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு இந்த தைரியத்தை கொடுத்திருக்கலாம்.

இந்த கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் வேண்டுமானால் சேரலாம். மருத்துவர் ராமதாஸ் சேருவாரா என்பது கூட சந்தேகம்தான்.

மோடி -அமித் ஷா இருவரும் கிருஷ்ணர்-அர்ஜுனன் போன்றவர்கள் என்றார் ரஜினி. துரியோதனன்-சகுனி போன்றவர்கள் என்று காங்கிரசின் கே எஸ் அழகிரி ஒப்பிடுகிறார்.

காஷ்மீர் நடவடிக்கையை துணிச்சலான நடவடிக்கை என்று பாராட்டிய ரஜினி அதில் இருக்கும் சிக்கல்களை பற்றி குறிப்பிடவில்லை .

மொத்தத்தில் இந்த மூவரும் சேர வேண்டும் என்ற திட்டம் பாதியிலேயே உடைந்து விடும் வாய்ப்புகள் தான் அதிகம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top