Connect with us

தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது சரிதானா???!!

terrorist murder

Latest News

தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது சரிதானா???!!

மத்திய பிரதேசம் ஒரு மர்மப் பிரதேசம்.

வியாபம் ஊழல் சம்பந்தப்பட்ட நாற்பது பேர் மிக மர்மமான முறையில் இறந்திருக் கிறார்கள்.    இதுவரை யார் அந்த சூத்திரதாரி  என்பது கண்டு  பிடிக்கப் படவேயில்லை.

போபால் மத்திய சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே எப்படி தீவிரவாத கைதிகள் தப்பினார்கள்.?     கடந்த பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு முறை இது போன்ற சிறையிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சிறையிலிருந்து தப்பியவர்கள் ஒரு காவலரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்கள் என்பது அவர்கள்  கொடியவர்கள் என்பதை நிரூபிக்கிறது.

ஆனால் அதற்குப் பின் வெளி வந்த காவல் அதிகாரிகளுக்கு இடையே ஆன உரையாடல் அது என்கவுண்டர் அல்ல கொலை என்பது போல தோற்றம்  தெரிகிறது.

ஐந்து  பேரையும்  அல்ல எல்லாரையும் கொல் .   தப்ப விட்டு விடாதே.   ஒருவனை மட்டும் விட்டு விடலாமே .  வேண்டாம் அது நல்லதல்ல.   அலைய வேண்டியிருக்கும். முடித்து விடு என்றெல்லாம் போகும் அந்த உரையாடல் தப்பியவர்களை பிடித்த பின் சுட்டுக் கொன்ற தாகத்தான் சொல்கிறது.    விடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்வை அதிகப் படுத்தி இருக் கின்றன.

நீதிமன்றத்தில் நிரூபிக்காமலேயே காவல் துறையே  தண்டனை  வழங்கி விடலாம் என்ற நடைமுறை அமுல் படுத்தப் பட்டால் நாட்டில் அராஜகம்தான் தாண்டவமாடும்.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற முறை நாட்டில்  நிலவினால் அது காடாகத்தான் இருக்கும் நாடாக இருக்காது.

சிறைத்துறையை நிர்வகிப்பவர்கள் எவ்வளவு தான் தோன்றித்  தனமாக  செயல்படுகிறார்கள் என்பதற்கு போபால் சிறை சம்பவம் தக்க உதாரணம்.

அதுவும் பா ஜ க ஆளும் ம பி யில் கொல்லப்  பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்னும்போது சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.

விடை கண்டு நாட்டை அமைதிப் படுத்த வேண்டிய கடமை ஆள்வோருக்கே .

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top